அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ரிபாகினா, மற்றும் அசெரன்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்
அமெரிக்காவில் புளோரிடோ மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 100 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓப்பன் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் சுற்று ஆட்டத்தை இழந்தாலும் அடுத்த இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி 3-6, 7-5, 6-4 என டென்மார்க்கின் கிளாரா டான்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மற்றொரு போட்டியில் பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா 7-5,3-6,6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.