இன்று தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழகம் உள் மாவட்டங்கள் வெப்ப அலை தாக்கம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், கடலூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது