முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் நாகாஸ்திரா 1 ஆகும். இந்த ட்ரோன் மூலம் வெடி மருந்துகள் சுமந்து செல்லப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்த ட்ரோனின் முதல் தொகுப்பு (120 ட்ரோன்கள்) தற்போது இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாகாஸ்திரா 1 என்ற ட்ரோனை நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராணுவத்தில் உள்ள தற்கொலை படையினர் நடத்தும் தாக்குதலை இந்த ட்ரோன் மேற்கொள்ளும் என்பதால், ராணுவ வீரர்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. எனவே, இந்த ட்ரோனக்கு ‘சூசைட் ட்ரோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 மீட்டர் வரையிலான துல்லியத்தில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் இலக்கை தாக்கும் திறனை நாகாஸ்திரா 1 கொண்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய திறன் கொண்டது.