நாடு முழுவதும் விவசாயிகள் மார்ச் பத்தாம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மார்ச் பத்தாம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நாடு முழுதும் நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் ஆறாம் தேதி விமானம், ரயில், பேருந்துகள் மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.