முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்கா முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் 900 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்திட பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங், மைக்ரோசிப், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய மையமாக அமையும்.