அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமலாக்கத்துறை கைது செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலனை செய்யப்படும். இது குறித்து இன்று தயாராக வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பியாரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது