லேஸ் சிப்ஸ் தயாரிப்பில் இனி பாமாயிலுக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெப்சிகோ நிறுவனத்தின் பிரபல பிராண்டான லேஸ் சிப்ஸ் இந்தியாவில் பாமாயில் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பொதுவாக பரவி வருகின்றது. அதனை தொடர்ந்து இனி சிப்ஸ் தயாரிக்க பாமாயில் பயன்படுத்தாமல் சூரியகாந்தி எண்ணெய் கொண்டு தயாரிக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் லேஸ் சிப்ஸ்களில் உப்பின் அளவை குறைக்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது