தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பயிர் காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பயிர் காப்பீடு திட்டம் மூலம் சம்பா நெற்பயர்களுக்கு 11.20 லட்சம் விவசாயிகள் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு ரூபாய் 1375 கோடியும் காப்பீடு கட்டண மானியமும், ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டணமாக ரூபாய் 824 கோடியும், விவசாயிகளின் பங்குத்தொகையாக ரூபாய் 120 வழங்குகிறது.ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயற்கை இடர்பாடுகளால் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் 560 கொடி ரூபாய் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.