பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. அதில் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. மதிமுக திருச்சியிலும், நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் கட்சியும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், விசிகவிற்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.