ஒரு வரி செய்திகள்

உலகம்

Feb 10, 2025

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரியை திங்கட்கிழமை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இதற்கு சீனா மற்றும் யூரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யூரோப்பிய ஆணையம் தகுந்த பதிலடி அளிப்பதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், சீனாவும் $14 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க நிலக்கரி மற்றும் எல்என்ஜி இறக்குமதிக்கு பதிலடி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், டிரம்ப், ஐரோப்பிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அமெரிக்காவுடனான வர்த்தக இழப்பை குறைக்க முடியாவிட்டால் ஜப்பானுக்கும் வர்த்தக தண்டனை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். மேலும், தனது பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவுக்குப் புதிய "பொன்னான யுகத்தை" கொண்டு வரும் என்று டிரம்ப் உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.

Feb 10, 2025

அமெரிக்க அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுத் துறை (DOGE), ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கில் ராஜ்பாலை தேசிய சமுத்திரவியல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) பிரதிநிதியாக நியமித்துள்ளது. DOGE மற்றும் NOAA இரண்டிலும் ராஜ்பாலுக்கு மின்னஞ்சல் முகவரிகள் உள்ளன. மேலும், அவர் NOAA-வின் அனைத்து கூகுள் தளங்களுக்கும் எடிட்டர் அனுமதியைப் பெற்றுள்ளார். இது சமீபத்திய பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க (DEI) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், எலான் மஸ்க் மூலம் அமெரிக்க அரசின் முக்கிய பணியில் அமரும் 2 ம் இந்தியராக ராஜ்பால் உள்ளார்.

30 வயதை நெருங்கும் ராஜ்பால், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) கணினி அறிவியல் மற்றும் வரலாறு படித்தவர். அவர் முன்னதாக ட்விட்டரில் பணிபுரிந்து, எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு வெளியேறினார். மேலும், டெஸ்லா கன்சோலை மறுசீரமைப்பதில் ஈடுபட்டார். அண்மையில் அவரது ஆன்லைன் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Feb 10, 2025

நேற்றிரவு, இஸ்ரேல் விமானப்படை லெபனானின் பெகா பகுதியில் உள்ள சுரங்க பாதையை இலக்காக வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது.

சிரியா-லெபனான் இடையை இணைக்கும் இந்த சுரங்கம் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கடத்தலுக்காக பயன்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது. இதற்கு முன்பும் இந்த சுரங்கம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கம் மறுபடியும் பயன்பாட்டுக்கு வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இஸ்ரேல் உறுதி கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆயுதகளைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் தாக்குதலும் நடத்தப்பட்டது. இஸ்ரேல்-லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ள நிலையில், இந்த தாக்குதல் அதனை மீறுவதாக அமைந்துள்ளது.

Feb 10, 2025

மெக்ஸிகோவில் பேருந்து லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 41 பேர் கருகி உயிரிழந்தனர்.

வடக்கு அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டின் குயிண்டினா ரோ மாகாணம், கான்கனில் இருந்து டபாஸ்கோ செல்லும் வழியில் பயணித்த பேருந்து, எஸ்கார்சிகா பகுதியில் லாரியுடன் மோதி தீப்பிடித்தது. 48 பயணிகளுடன் சென்ற பேருந்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டபோதும், 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Feb 10, 2025

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் உரையாடியதாக தெரிவித்தார். உக்ரைனில் நிலவும் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேசியதாக அவர் கூறினார்.

"போர்க்களத்தில் உயிரிழப்புகளை புதின் கவனத்தில் கொண்டு வருவார் என நம்புகிறேன். மக்கள் மரணம் அடைவதை நிறுத்த விரும்புகிறேன். 20 லட்சம் பேர் காரணமின்றி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இளமையான, அழகானவர்கள், உங்கள் குழந்தைகளை போன்றவர்கள்," என்றார்.

புதினுடன் எப்போதும் நல்ல உறவு கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில், பைடன் நாட்டுக்கு குழப்பம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர வலுவான திட்டம் தன்னிடம் இருப்பதாக கூறிய டிரம்ப், அது விரைவில் செயல்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Feb 10, 2025

கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை எழுந்துள்ளது. பொதுவாக, அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பூமியின் மேற்பரப்பை தாக்கும் முன் ஆற்றல் குறைந்து விடும். ஆனால், மேற்பரப்பு பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக ஆற்றலுடன் தாக்கி கட்டிடங்கள் மற்றும் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலைமை கவலைக்கிடம் என்பதால், மக்கள் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Feb 10, 2025

மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தங்க சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் கோவா நகரில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்திற்கு நேற்று தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அவர்களுக்கு பாதுகாப்பாக ராணுவ வீரர்களும் சென்றனர். அப்போது, அந்த வாகனங்களை குறித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தங்க சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Feb 08, 2025

இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலாகியதிலிருந்து இது 5வது முறையாக பணய கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். தெய்ர்-அல்-பலா நகரில் விடுதலை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் அங்கு வந்தன. இதை காண பொதுமக்களும் கூடினர்.

அதே நேரத்தில், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். பின்னர், ஒரு வெள்ளை வாகனத்தில் இருந்து 3 இஸ்ரேலிய கைதிகளை கொண்டு வந்து, தற்காலிக மேடையில் நிற்க வைத்தனர். மேலும், கைதிகளை பொதுவெளியில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். இது முதல்முறையாக நடந்தது. பின்னர், அவர்கள் ரெட் கிராஸ் தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள், 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் கைதியாக்கியவர்களாகும்.

Feb 08, 2025

மறைந்திருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த பகுதியில் மீதமுள்ள கிளர்ச்சியாளர்களை அழிக்க நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Feb 08, 2025

அலாஸ்கா விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உனலக்ளீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு செஸ்னா 208B விமானம் புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் விமானி உட்பட 10 பேர் பயணித்தனர். நார்டன் சவுண்ட் அருகே மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானிக்கு இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முயன்றபோதும், விமானம் தொடர்பை இழந்தது விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, கடைசி சிக்னல் கிடைத்த இடத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடத்திய மீட்புப் படையினர், விமானம் அலாஸ்கா கடல் பனியில் நொறுங்கி கிடந்ததை கண்டனர். விசாரணையின் பின்னர், 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Feb 08, 2025

ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என வலியுறுத்தினார்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் நீண்ட காலமாக நீடிக்கிறது. 2018ல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் உள்ள அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டிரம்ப், அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அதிக அழுத்தம் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், டெஹ்ரானில் நடந்த கடற்படை நிகழ்ச்சியில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என வலியுறுத்தினார். "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாகவோ, கவுரவமானதாகவோ இருக்காது" என அவர் கூறினார்.

Feb 08, 2025

மோசடி நிறுவனங்களில் சிக்கிய 13 இந்தியர்கள் உள்ளிட்ட 61 பேரை மியான்மர் அரசு மீட்டது.

மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்பு என்ற காரணத்தை காட்டி, மோசடி கும்பல்கள் வெளிநாட்டவரை ஏமாற்றுகின்றன. பலர் அதை நம்பி சென்று மோசடியில் சிக்கிக் கொள்கிறனர். இந்த மோசடி நிறுவனங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் சிக்கி தவிக்கின்றனர். இதனைத் தீர்க்க, மியான்மர் அரசுடன் இணைந்து இந்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மோசடி நிறுவனங்களில் சிக்கிய 13 இந்தியர்கள், 39 சீனர்கள் உள்ளிட்ட 61 பேரை மியான்மர் அரசு மீட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கள் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Feb 07, 2025

இந்திய மத்திய அரசு, அரசு அதிகாரிகள் அலுவலக கணினிகளில் சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. தகவல் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் டீப்சீக் செயலி அமெரிக்காவின் சாட்ஜிபிடியைவிட அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இதற்கு தடைவிதித்துள்ளன. டீப்சீக்கில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தியாவில் இதனை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் க்வா ஜியாகுன், "சீன அரசு எந்த நிறுவனத்தையும் சட்டத்திற்கு எதிராக தகவல்களை சேகரிக்கச் சொல்லவில்லை. இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு வணிகத்தை அரசியலாக்கும் செயல். சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Feb 07, 2025

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு தற்காலிக இடைவெளி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைகிறது. அதேசமயம், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதால், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும், மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை எந்த நேரத்திலும் தீவிரமாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்க ஈரான் ஆளில்லா விமானம் தாங்கி போர் கப்பலை (drone-carrier warship) முதன்முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த போர் கப்பலில் ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளும் பயன்படுத்த முடியும் என்று ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் நிலவும் முன்னேற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Feb 07, 2025

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ், 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்தபோது, சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ரூ.6 கோடி வரை மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. ஆனால் புகார்தாரர் வழக்கை வாபஸ் பெற அறிவித்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Feb 07, 2025

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வெளிநாட்டினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு, கிராமவாசிகள் 2 ஆண்கள் உட்பட 4 பேரின் உடல்களை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் உடல்களை கைப்பற்றி, இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Feb 07, 2025

கிரீஸ், ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள பால்கன் தீபகற்பத்தில் அமைந்த ஏஜியன் கடலில் அமைந்துள்ள அதன் பிரபலமான சுற்றுலாத் தலமான சாண்டோரினி தீவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது.

நிலநடுக்கத்திற்குப் பின்னர், சாண்டோரினியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணமாக 11,000 பேர் தீவிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அவசரநிலை உத்தரவு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீடிக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Feb 07, 2025

நைஜீரியாவில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவர்கள் பலியாகினர்.

ஆப்பிரிக்காவின் சம்பாரா மாகாணம், கவுரா நமோடா நகரில் உள்ள இஸ்லாமிய மதப்பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கடந்த இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மாணவர்களை மீட்டனர். ஆனால், 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Feb 07, 2025

கிழக்கு காங்கோவில் புகாவுக்கு அருகே இன்னொரு நகரத்தையும் கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டு வருகின்றனர். ருவாண்டா அவர்களுக்கு ஆதரவாக சுமார் 4,000 வீரர்களை அனுப்பி, கோமா நகரத்தை கைப்பற்ற உதவியுள்ளது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் தேதி, எம்-23 கிளர்ச்சியாளர்கள் மனிதாபிமான காரணங்களுக்காக போர் நிறுத்தத்தை அறிவித்தனர். அதற்குள் கிழக்கு காங்கோவில் புகாவுக்கு அருகே இன்னொரு நகரத்தையும் அவர்கள் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இதனால், உள்நாட்டு போரின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.

Feb 06, 2025

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக மேற்கிந்திய தீவின் டுவெய்ன் பிராவோவை முந்தினார். எம்.ஐ கேப் டவுன் அணிக்காக Paarl Royals-க்கு எதிராக நடந்த முதலாவது குவாலிபையர் (Qualifier 1) போட்டியில் ரஷீத் 2/34 எடுத்தார். இதனால் அவரது மொத்த விக்கெட் எண்ணிக்கை 633 ஆக உயர்ந்தது. இவர் 461 டி20 போட்டிகளில் 18.07 சராசரியுடன், சிறந்த பந்துவீச்சு மதிப்பாக 6/17 கொண்டுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் பிராவோ 556 போட்டிகளில் 631 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

குவாலிபையர் போட்டியில் எம்.ஐ கேப் டவுன் 199/4 எனப் பெரிய ஸ்கோர் அமைத்தது. ரியான் ரிக்கெல்டன் (44) மற்றும் ராசி வான் டெர் டுசன் (40) 87 ரன்கள் சேர்த்தனர். தேவால்ட் பிரெவிஸ் (44*) மற்றும் டெலானோ போட்ட்கியெடர் (32*) இறுதியில் அதிரடி ஆட்டம் ஆடினர். Paarl Royals அணியில் டேவிட் மில்லர் (45) மற்றும் தினேஷ் கார்த்திக் (31) போராடினாலும், எம்.ஐ கேப் டவுன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ‘Player of the Match’ விருது டெலானோ போட்ட்கியெடருக்கு வழங்கப்பட்டது. Paarl Royals அணி இன்னும் ஒரு வாய்ப்பு பெற, வியாழன் Qualifier 2 போட்டியில் விளையாடுகிறது.

Feb 06, 2025

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டினா விலகுவதாக அதன் அதிபர் ஜேவியர் மிலே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி, "தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட சுகாதார மேலாண்மை பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினாவின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி வந்த ஆர்ஜென்டினா, இந்த அமைப்பின் மொத்த நிதியில் 0.11% பங்குதாரராக இருந்தது.

இதைத் தவிர, அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கான அரசாணையை அதன் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஆண்டுதோறும் 325 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக இருந்த நிலையில், சீனா வெறும் 39 மில்லியன் டாலர் மட்டுமே வழங்குவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் அமெரிக்கா விலகுவதாகவும், அந்த அமைப்புக்கு வழங்கப்படும் முழு நிதியையும் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

Feb 06, 2025

அமெரிக்காவைப் போலவே, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் இனி UNHRC-வில் பங்கேற்காது என்றும் அவர் கூறினார். எக்ஸ் வலைதளத்தில், "ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. UNHRC மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயகமான இஸ்ரேலை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது. யூத விரோதத்தை ஊக்குவிக்கிறது" என அவர் குற்றம்சாட்டினார்.

ஈரான், கியூபா, வட கொரியா, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு விடுத்த விமர்சனத்தை விட, இஸ்ரேல் மீது அதிக அவதூறு ஏற்படுத்தப்படுவதாகவும், இந்த பாகுபாட்டை இனி ஏற்க மாட்டோம் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

Feb 06, 2025

அமெரிக்காவில் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

குடியேற்ற ஒடுக்குமுறை, திருநங்கை உரிமைகள் நீக்கம், காசாவில் பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பிலடெல்பியா, கலிபோர்னியா, மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் நிர்வாகத்தையும், புதிய அரசாங்க செயல்திறன் தலைவர் எலான் மஸ்க்கையும், "அரசு திட்டம் 2025"-ஐயும் எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். பலர் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாகவும் சென்றனர்.

Feb 06, 2025

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி இன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டு, கீவ் நகரில் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்த பயணத்தின்போது, உக்ரைனுக்கு ரூ.602.96 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த உதவியில், உலக உணவு திட்டத்தின் கீழ், போர் பாதித்த சிரியாவுக்கு உக்ரைன் ரூ.32.87 கோடி மதிப்பிலான தானியங்களை அனுப்பும் திட்டமும் உள்ளது. மேலும், ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்த ஆற்றல் நிலையங்களை பராமரிக்க ரூ.148.61 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் உக்ரைன் சென்றிருந்த நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Feb 06, 2025

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெறும் 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்க சீனா தனது நட்பு நாடுகளின் தலைவர்களை அழைத்தது. அவர்களில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் ஒருவர்.
இந்த அழைப்பை ஏற்று, அவர் 5 நாள் அரசு விஜயமாக சீனா சென்றார். நேற்று முன்தினம் பீஜிங்கில், அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

Feb 06, 2025

டாக்காவில் போராட்டக்காரர்கள் முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை தீவைத்து, அவரது உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. அதன் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவ கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

வங்கதேச பொதுத் தேர்தல் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் நடைபெறலாம், ஆனால் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, அவாமி லீக்கின் மாணவர் பிரிவு, சத்ரா லீக், உரை நிகழ்த்த திட்டமிட்டது. தகவல் பரவியவுடன் டாக்காவில் போராட்டக்காரர்கள் முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை தீவைத்து, அவரது உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

Feb 05, 2025

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளை, அமெரிக்கா தற்போது ஹாங்காங் மீதும் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க சுங்கத் துறை அறிவிப்பின் படி, ஹாங்காங் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். இது சீனாவிற்கான வரி விதிப்புக்கு இணையானது. ஹாங்காங் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.

சீனா, அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு 15% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள், சில வாகனங்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு விதித்த வரிகளை தற்காலிகமாக நிறுத்திய நிலையில், சீனாவிற்கான வரியை மட்டும் தொடர்ந்தது. இந்த நிலையில், ஹாங்காங் மீதான வரி இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு நன்மையாக அமையலாம் என கூறப்படுகிறது.

Feb 05, 2025

பசிபிக் பெருங்கடலில் உள்ள தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப் போர்பயிற்சி நடத்தி வருகிறது.

சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இரு நாடுகளும் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இதில் அமெரிக்காவின் B-1B குண்டுவீச்சு விமானங்கள், F/A-50 போர் விமானங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.

Feb 05, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும், தேவையெனில் அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் முடியும். அப்பகுதியில் உள்ள வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதமான கட்டிடங்களை நீக்கி, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். பொருளாதாரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி வழங்குவோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தால் அமைதி நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடியது. இது மத்திய கிழக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தும். இஸ்ரேல் இன்னும் வலுவாகிறது. ஆனால் ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தலும் நீங்கவில்லை. எங்கள் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் அமைதியையும் பற்றி ஆலோசித்தோம்" என்று கருத்து தெரிவித்தார்.

Feb 05, 2025

மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் நேற்று கையெழுத்திட்டார். மேலும், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் மீதான மறுஆய்விற்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிர்ப்பு உள்ளது என்பதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் டிரம்ப் சந்தித்ததையடுத்து UNRWA நிதி நிறுத்தம் தற்செயலானது அல்ல. நேதன்யாகு UNRWA ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படுகிறது என கூறிய நிலையில், டிரம்ப் இந்த நிதி தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.

Feb 05, 2025

ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.

ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளியில் ஏற்பட்ட அச்சத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Feb 05, 2025

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11.30 மணியளவில் (இந்திய நேரம்) 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 60 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், 36.64° வடக்கு அட்சரேகையும் 71.16° கிழக்கு தீர்க்கரேகையையும் மையமாகக் கொண்டதாக முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Feb 04, 2025

மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த வரிக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றப்பட்டுள்ளது. மெக்சிகோ, அமெரிக்க எல்லையில் 10,000 ராணுவத்தினரை நியமிக்க ஒப்புக்கொண்டதாலும், கனடா 1.3 பில்லியன் டாலர் செலவில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக உறுதியளித்ததாலும், இந்த தளர்வு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10% வரி அமலுக்கு வருவதாகத் தெரிகிறது. இது குறித்து டிரம்ப் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. சீன அதிபருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feb 04, 2025

கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25% வரியும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரியும் விதிக்கப்படுகிறது.

டிரம்பின் வரி உத்தரவுக்கு பதிலடியாக சீன அரசும் புதிய வரி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு மீது 15% வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிப்பிட்ட ரக கார்கள் மீது 10% வரியும் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Feb 04, 2025

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் சண்டையிட்டுவந்த 'அர்பாத்' ஆயுதக் குழு தலைவன் ஆர்மென் சாக்ஸ்யான், மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது படை உக்ரைன் படைகளை எதிர்த்து போராடி வந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இதற்கு உக்ரைன் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

உக்ரைன் ராணுவ உளவுத்துறையான எஸ்பியு, சாக்ஸ்யான் சிறைக் கைதிகளை கட்டாயமாக தன் படையில் சேர்த்துள்ளதாக முன்பு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் ரஷியாவில் ராணுவத் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதும் நினைவு கூறத்தக்கது.

Feb 04, 2025

பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாரிஸ் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி நேராக வாஷிங்டன் டி.சி.க்கு புறப்படுவார் என கூறப்படுகிறது.

இது, டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணமாகும். பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை மோடி அமெரிக்க தலைநகரில் தரையிறங்குவார் என்றும் மறுநாள் டிரம்ப்-மோடி சந்திப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Feb 04, 2025

ஐரோப்பிய நாடான கிரீசின் சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்களுக்கு பின், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் வகையில், அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளர்.

Feb 04, 2025

அமெரிக்காவின் ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டது.

விமானம் எப்போது புறப்பட்டது மற்றும் எப்போது இந்தியா செல்லும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், சி-17 ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றது என்று தெரிவித்தார். அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, "அமெரிக்கா குடியேற்ற சட்டங்களையும் எல்லை பாதுகாப்பையும் கடுமையாக்கியுள்ளது" என மட்டும் கூறினார்.

டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 205 இந்தியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பிறகு, அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Feb 04, 2025

தென் ஆப்பிரிக்காவிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற பிறகு, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, தென் ஆப்பிரிக்காவிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தெரிவித்ததாவது: "தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமலாகியுள்ளது. இதனால் பெரிய அளவில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா துணை நிற்காது. எனவே, அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Feb 04, 2025

அயர்லாந்தில் நடந்த சாலை விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலியாகினர்.

அயர்லாந்தின் கவுண்டி கார்லோ நகரில் வசித்த இந்திய மாணவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி, அங்குள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்தனர். நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று, நான்கு நண்பர்களும் ஆடி காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு பயணித்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

Feb 04, 2025

பாகிஸ்தானில், பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குலசி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கையாகவும், பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

Feb 04, 2025

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிய வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதல் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Feb 03, 2025

காங்கோ குடியரசில் எம்23 கிளர்ச்சிக் குழு, கோமா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது.

காங்கோவில் 25,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர், இதில் சுமார் ஆயிரம் பேர் கோமா நகரில் இருக்கின்றனர். கோமா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Feb 03, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் பிரிவில் ‘த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்றுள்ளார். இந்த ஆல்பம் தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞர் வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

சந்திரிகா, சென்னையில் வளர்ந்து மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் குடியேறி தொழிலதிபராக வளர்ந்தார். 2009 இல் வெளியிட்ட ‘சோல் கால்’ இசை ஆல்பம் அந்த ஆண்டின் கிராமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Feb 03, 2025

ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து சோமாலியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலியாவில், அல் ஷபாப், ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒழிக்க சோமாலிய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அமெரிக்க ராணுவமும் அவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றபின் ஆப்பிரிக்காவில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

Feb 03, 2025

நீதிமன்ற உத்தரவால், அல்பேனியாவில் இருந்து அகதிகள் படகு மூலம் மீண்டும் இத்தாலி கொண்டு வரப்பட்டனர்.

வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பாவிற்கு குடியேறுகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால், ஐரோப்பிய நாடுகள் எல்லை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 66,000 பேர் இத்தாலியில் குடியேறியதால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 அகதிகளை கடலோர போலீசார் கைது செய்து, அல்பேனியாவில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை நாடு கடத்த முடிவு செய்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவால் நாடு கடத்தல் தடைசெய்யப்பட்டதால், அவர்கள் படகு மூலம் மீண்டும் இத்தாலி கொண்டு வரப்பட்டனர்.

Feb 03, 2025

சூடானின் கார்டூம் அருகே ஒடர்மென் நகரில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர்

2021ஆம் ஆண்டு சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஜெனரல் படக் அல்-பர்ஹன் தலைவராகவும், ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ துணைத்தலைவராக செயல்பட்டு வருகின்றனர். ராணுவத்துடன் அதிவிரைவு ஆதரவு படையை இணைக்க ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயன்றதால், 2023 ஏப்ரல் 15 முதல் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் தொடர்கிறது. இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட, அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். சமீபத்தில், சூடானின் கார்டூம் அருகே ஒடர்மென் நகரில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், துணை ராணுவத்தினர் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Feb 01, 2025

மலேசியாவின் பார்னேவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை இந்த கடுமையான மழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மலேசிய வானிலை ஆய்வு மையம், கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கின்றன.

Feb 01, 2025

லெபனானின் பெகா பகுதியில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் விமானப் படை நேற்றிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில், ஆயுத உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ராணுவ உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. மேலும், சிரியா-லெபனான் எல்லையில், ஹிஸ்புல்லா ஆயுதக் கடத்தலுக்காக உருவாக்கிய கட்டமைப்புகளும் தாக்குதலில் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா இயக்கம் ஆளில்லா விமானத்தைக் கொண்டு தாக்குதல் முயற்சி செய்தது. ஆனால் இஸ்ரேல் விமானப் படை அதை முறியடித்தது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

Feb 01, 2025

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

1976 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் எபோலா ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முதலாக எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், இந்த உயிர்க்கொல்லி தொற்றால் சுமார் 11,000 பேர் உயிரிழந்தனர். பின்னர் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கிடையில், தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த ஆண்டில் எபோலா காரணமாக உயிரிழந்த முதலாவது நபராக மாறினார். இதனைத் தொடர்ந்து, உகாண்டாவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 01, 2025

ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் ரஷியாவின் டுபோலேவ்-95 போர் விமானங்கள் நீண்ட நேரமாக பறந்தது கண்டறியப்பட்டது.

இந்த குண்டுவீச்சு விமானங்கள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் வட்டமிட்டன. ரஷியாவின் இந்த நடவடிக்கை மீது ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாது, கடந்த செப்டம்பர் மாதத்திலும் ரஷிய விமானங்கள் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் ரஷியாவின் இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளின் உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் பாதுகாப்பு தரப்பினர் இந்த செயல்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Jan 31, 2025

ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை புகைப்பதற்கு நகர மக்களுக்கு முழுமையான தடையை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

உலகளவில் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான உலக எக்ஸ்போ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இது, 2022-ல் துபாயில் சிறப்பாக நடத்தப்பட்டது. அடுத்த உலக எக்ஸ்போ 2025-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டு தங்கள் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அரங்குகளில் வெளிப்படுத்தவுள்ளன. ஒசாகாவில் இதற்கான திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை புகைப்பதற்கு நகர மக்களுக்கு முழுமையான தடையை அதிகாரிகள் விதித்துள்ளனர். இந்த தடை ஆண்டுமுழுவதும் அமலில் இருக்கும். மேலும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 31, 2025

அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரிலிருந்து 64 பேருடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டனின் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு, அமெரிக்க ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியது.

ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி தொடருகிறது. அதிகாரிகள் கருப்புப்பெட்டியை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Jan 30, 2025

கிழக்கு ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான் நாட்டின் யுனைட்டி மாகாணத்தில், ஜுபா நகரின் நோக்கி பறந்து சென்ற ஒரு சிறிய விமானம் விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டு தகவல் துறை மந்திரி கேட்வெச் பிபல் கூறியபடி, பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சுமந்து சென்ற அந்த விமானம் விபத்தில் சிக்கியது. உயிரிழந்தவர்களில் 2 சீனர்களும், 1 இந்தியரும் உள்ளனர். மேலும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jan 30, 2025

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

காசா போர், கடந்த 15 மாதங்களில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் முயற்சி காரணமாக, காசாவில் 19-ந்தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்ப், போர் நிறுத்தத்தை தொடருமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வருகின்றார். அதனையடுத்து, டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை அமெரிக்காவுக்கு அழைத்தார். அதையடுத்து, அடுத்த வாரம் அவர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4-ந்தேதி வெள்ளை மாளிகையில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றனர்.

Jan 30, 2025

கனடா விசாரணை ஆணையம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா மற்றும் எந்த வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசின் உளவாளிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியானது. 2023-ல், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிஜ்ஜாா் கொலையில் இந்தியா தொடர்புடையது என்ற ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இது இரு நாடுகளுக்கு இடையே உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் இந்தியாவின் தலையீடு குறித்து அச்சங்கள் உள்ளதாகவும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jan 30, 2025

சவுதி அரேபியாவின் ஜிஷான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 இந்தியர்கள் அடங்குவர்.

இந்த சம்பவத்தை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டியதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், உதவிக்கான எண்ணிக்கைகளை வெளியிட்டனர். இந்த விபத்து குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டார் என்று கூறி, தேவைபடும் உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Jan 30, 2025

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை, இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக கொழும்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு, ராஜபட்ச ஆட்சியில் கொழும்பு நகரில் கிருஷ் ஹோட்டல் கட்டுமானத்திற்கு இந்தியா ரூ.7 கோடி கடனுதவி வழங்கியது. ஆனால் நமல் ராஜபட்ச அந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டு உருவாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்கு பின்னர் நிறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் அதிபராக பொறுப்பேற்ற அனுர குமார திசநாயக, ராஜபட்ச குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

Jan 29, 2025

அமெரிக்காவில் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் ராஜினாமா செய்ய டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த 8 மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம், செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் இதனை அறிவித்தது. அந்த மின்னஞ்சலில், அரசு பணியை தொடர விரும்பாதவர்கள் "ராஜிநாமா செய்கிறேன்" என்று பதிலளித்து, செப்டம்பர் 30 வரை முழு ஊதியமும், அனைத்து சலுகைகளும் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள், தூதரகம், பாதுகாப்பு மற்றும் தபால் சேவை ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jan 29, 2025

செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

செர்பியா நாட்டின் நோவிசாட் ரெயில் நிலையத்தில் 2023 நவம்பர் 1-ந்தேதி மேல் கூரை சரிந்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. முன்னாள் மந்திரி உட்பட பல அரசு அதிகாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட காலம் போராடி, சர்வாதிகார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மிலோஸ் வுசெவிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய அரசாங்கம் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் 30 நாட்களில் நடைபெற உள்ளது.

Jan 29, 2025

வங்காளதேசத்தில் சுமார் 25,000 ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பின்னணி, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி உருவாகியுள்ளது. இதன் மத்தியில், சம்பள உயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இடைக்கால அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், நாட்டின் சுமார் 25,000 ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டு, ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

Jan 29, 2025

காங்கோ சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பினர்.

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரில் எம்-23 கிளர்ச்சி குழுவினர் கடந்த வாரம் தாக்குதல் நடத்தி, ஐ.நா. அமைதிப்படை வீரர்களுடன் 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக, முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அங்கு சிறை காவலர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் வாய்ப்பை பயன்படுத்தி, சிறையில் உள்ள சுமார் 6,000 கைதிகள் தப்பி ஓடியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

Jan 28, 2025

பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில்,ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இழந்தது. L

பின் களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் ஓவன் மற்றும் காலேப் ஜூவல், தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி ஓவன் 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தினர். பின்னர் 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Jan 28, 2025

பெலாரசின் அதிபராக 1994 முதல் பொறுப்பு வகித்து வரும் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் இந்தத் தேர்தலை நிராகரித்தன. ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட லுகஷென்கோ, 87% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், லுகஷென்கோவுக்கு எதிராக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் அவரை புகழ்ந்ததால், இந்தத் தேர்தல் பெயரளவிற்கு மட்டும் நடத்தப்பட்டது என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. லுகஷென்கோ ஆட்சியில், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அடக்கம் விதிக்கப்பட்டு, பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக பெலாரஸ் ஐரோப்பாவின் கடைசி சாவர்திகார நாடாக கருதப்படுகிறது.

Jan 28, 2025

பாலஸ்தீனியர்கள் காசாவின் வடக்கு பகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதங்களுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரு தரப்பும் போர் நிறுத்தம் ஒப்புக்கொண்ட நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். முதல் கட்டமாக, ஹமாஸ் 3 பெண் பணயக் கைதிகளை விடுத்து, இரண்டாவது கட்டத்தில் 4 இஸ்ரேல் பெண் கைதிகளை விடுவித்தது. இஸ்ரேல் 200 பாலஸ்தீனிய கைதிகளை விடுத்தது. ஒப்பந்தப்படி, அர்பெல் யாஹுட் என்ற பெண் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பின்னர், பேச்சுவார்த்தையில் 6 பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் உடன்பட்டது. இன்று, பாலஸ்தீனியர்கள் காசாவின் வடக்கு பகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

Jan 28, 2025

திபெத்தில் ரிக்டரில் 4.5 ஆக நிலநடுக்கம் பதிவானது.

திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 7ம் தேதி, ஷிகாட்சே நகரில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி 3.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில், 29.10 டிகிரி வடக்கு மற்றும் 87.66 டிகிரி கிழக்கு இடங்களில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

Jan 27, 2025

பன்முக இந்தியா மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலைப் படைப்பு கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது வழக்கமான சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் ஆடைகள் காட்சி அளிக்கின்றன. லடாக்கி உடையில் பனிச்சிறுத்து, வேட்டி-குர்தா அணிந்த 'புலி' உள்ளிட்டது இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த டூடுல், சர்ரியலிசம் கலை இயக்கத்தின் கூறுகளை கொண்ட வண்ணமயமான கலைப்படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுளின் ஆறு எழுத்துக்களும் 'வனவிலங்கு அணிவகுப்பு' தோற்றத்தை அளிக்கின்றன.இந்த ஓவியம், புனேவின் கலைஞர் ரோஹன் தஹோத்ரேவின் கையால் உருவாக்கப்பட்டது. கூகுள் அதன் விளக்கத்தில், "இந்த டூடுல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது, இது தேசிய பெருமையும் ஒற்றுமையையும் குறிக்கும் நாள்" என்று குறிப்பிட்டுள்ளது.

Jan 27, 2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சினியாகோவா-டவுன்சென்ட் ஜோடி வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீ வெற்றிபெற்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக் நாட்டின் கேடரினா சினியாகோவா மற்றும் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் தைவானின் ஹ்சீஹ் சு ஜோடியுடன் மோதின. இதில், சினியாகோவா-டவுன்சென்ட் ஜோடி 6-2, 6-7 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Jan 27, 2025

ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கிடையில் ஓராண்டு நீடித்த போரின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில், ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு அளிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு மேற்கொண்ட தாக்குதலில், மாலுமிகளை கைது செய்துள்ளனர். மேலும், ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர். இதில், 153 பேரை விடுதலை செய்தபோதும், மேலும் 7 ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஐ.நா. அமைப்பு, தனது ஊழியர்களின் கைது காரணமாக ஏமனில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Jan 27, 2025

சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையேயான அதிகாரப் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் மனித உயிரிழப்புகள் தினசரி அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையில், சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் போன்ற பாதுகாப்பு இடங்களை தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரானது என்று அது கண்டித்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Jan 27, 2025

நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்தில் பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் இனுகு மாகாணத்தில் நேற்று மாலை, பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி முன்னே சென்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததால், 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Jan 27, 2025

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். 83 பேர் காயமடைந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா 2024 செப்டம்பர் 27-ஆம் தேதி பெய்ரூட் நகரில் இஸ்ரேல் ராணுவத்தினால் தாக்குதல் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது, இஸ்ரேல் ராணுவம் லெபனானின் பல பகுதிகளை கைப்பற்றி கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. இந்த நிலையில், லெபனான் பொது சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் சில நகரங்கள் இஸ்ரேலின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியது. அந்த தகவல் தெளிவாக இல்லாததால், லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களில் நுழைய முயன்றபோது, இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 3 பெண்கள், 1 வீரர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். 83 பேர் காயமடைந்தனர்.

Jan 25, 2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் மற்றும் ஒலிவியா கடெகி ஜோடி, அவர்கள் சக நாட்டினரான கிம்பர்லி மற்றும் ஜான் பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டனர். இதில், ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

Jan 25, 2025

இலங்கையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்ற புலனாய்வுப் பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். முன்பாக, பணமோசடி சட்டத்தின் கீழ் யோஷிதா ராஜபக்சே குற்றம் செய்துள்ளதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் குற்ற புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jan 25, 2025

தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. ஊழியர்களை கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கிடையில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இதனடிப்படையில், ஐ.நா. அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இல்லாததால், ஏமனில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Jan 25, 2025

இந்தோனேசியாவின் முக்கிய தீவு ஜாவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 19 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஜாவாவின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்து ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Jan 25, 2025

இஸ்ரேல் பணய கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ந்தேதி முதல் அமலில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிடிக்கப்பட்ட கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அதன் பிரகாரம், ஹமாஸ் அமைப்பு காசாவில் இருந்து பிடித்துள்ள 33 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கிறது. முதல்கட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில், இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு ஈடாக, 200 பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியத்தில்தான் விடுவிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Jan 25, 2025

உக்ரைன், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட 13 பிராந்தியங்களை இலக்காக வைத்து மிகப்பெரிய சரமாரி டிரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதில், மாஸ்கோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலை மீது குண்டுகள் வீசப்பட்டதால் அந்த ஆலை தீக்கிரையாகியது. இதன் விளைவாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல், 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ரஷியாவிற்கு எதிராக உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாகும். இதேவேளை, ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம், உக்ரைன் அறிமுகப்படுத்திய 121 டிரோன்களில் பெரும்பாலும் பலவற்றை தடுத்து முடித்ததாக அறிவித்துள்ளது.

Jan 24, 2025

சியாட்டில் கோர்ட்டு டிரம்பின் உத்தரவை 14 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டது.

அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்று டிரம்ப் அறிவித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார். இதனை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாணங்களின் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது, சியாட்டில் கோர்ட்டு டிரம்பின் உத்தரவை 14 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டது. நீதிபதி, டிரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானதாக கூறி, இதனால் அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jan 24, 2025

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் நேற்று அமலுக்கு வந்தபோது, பாங்காக்கில் 300-க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நாளில் திருமணம் செய்து, புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்வுத் தொடர்பாக, பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா கூறுகையில், "இந்த சட்டம் பாலியல், இனம், மதம் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக அரவணைக்கிறது. நாம் அனைவருக்கும் சம உரிமை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்கிறோம்" என தெரிவித்தார். புதிய சட்டம் மூலம், தாய்லாந்தில் ஓரின தம்பதிகள் திருமணம் செய்து, சொத்துக்கள் பெறவும், குழந்தைகளை தத்தெடுத்து பிள்ளைகளை வளர்க்கவும் சம உரிமைகள் பெற்றுள்ளனர்.

Jan 23, 2025

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர்கள் சிறந்த பல பரிமாணங்களை எட்டுகிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் ஜப்பானின் டகுமா ஒபயாஷியை 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Jan 23, 2025

தெற்கு சூடான் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அனுமதி அளித்துள்ளது.

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடக்கின்றன. இதனால், சூடானிய வர்த்தகர்களின் கடைகள் சூறையாடப்பட்டு, 17-ந்தேதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பிறகு, தெற்கு சூடான் அண்டை நாடான சூடானில் வன்முறை காரணமாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அனுமதி அளித்துள்ளது. நமது மக்களை பாதுகாக்க இதுவே அவசியம் என தெரிவித்த தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 90 நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நிலைமை சரிவர்ந்த பின்னர் இதை நீக்குமாறு அறிவித்துள்ளது.

Jan 23, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் அகதிகளுக்கான குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, 27-ந்தேதி முதல் அகதிகளின் வருகைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், அமெரிக்காவில் அனுமதிப்பெற்ற அகதிகள் ஏற்கனவே இந்நாட்டுக்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அனுமதி பெற்ற அகதிகளின் பயணத்தை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என அறிவித்துள்ளது.

Jan 23, 2025

ஆப்கானிஸ்தானில் ரிக்டரில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் வழங்கிய தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில், 36.52° வடக்கு அகலம் மற்றும் 71.77° கிழக்கு நீளம் ஆகிய இடத்தில் ஏற்பட்டதாக முதலில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கம் பற்றிய பாதிப்புகளுக்கான எந்தவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Jan 23, 2025

பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் பரவலாக தாக்கம் செலுத்தி வருகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா போன்ற பகுதிகளில் 10 அங்குலம் அளவுக்கான பனிப்பொழிவுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு மாநிலங்களில் 1,20,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி இருப்பதுடன், லூசியானாவில் பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

Jan 22, 2025

ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவர், 1985-ம் ஆண்டு 153 பயணிகளுடன் விமானத்தை கடத்தி, அமெரிக்கரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர். தற்போது, கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் அவரது வீட்டின் முன் ஆறு தோட்டாக்கள் பாய்ந்தது. இதன் மூலம் அவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. ஷேக் ஹமாதி குறித்து தேடுதல் அறிவித்திருந்தது. இக்கொலை சம்பவம், குடும்ப பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்ததாக லெபனானில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Jan 22, 2025

விவேக் ராமசாமி கடந்த 20ஆம் தேதி DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், "செயல் திறன் துறை" (DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் இணைந்து கவனிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், 39 வயதான விவேக் ராமசாமி கடந்த 20ஆம் தேதி DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், "DOGE உருவாக்கத்தில் உதவிய வாய்ப்புக்கு நன்றி. எலான் மற்றும் அவரது குழு வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும், ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், அவர் DOGE பதவியை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 22, 2025

துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், ஒரு ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் நேற்று பரபரப்பான தீ விபத்து ஏற்பட்டது. 2 வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்திலிருந்து 66 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த படுகாயமடைந்தவர்களில் சிலர் உயிரிழந்ததுடன், பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 45 பேரின் அடையாளம் கண்டுள்ளனர். தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.

Jan 22, 2025

அயர்லாந்தில் பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (64) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அயர்லாந்தில் 2019 நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மத்திய வலதுசாரி பியன்னா பெயில் கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றொரு மத்திய வலதுசாரி பைன் கேல் கட்சி 38 தொகுதிகளில், மற்றும் இடதுசாரி சின் பைன் கட்சி 39 தொகுதிகளில் வெற்றியடைந்தது. எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பியன்னா பெயில் மற்றும் பைன் கேல் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க பேச்சுவார்த்தையை நடத்தின. அதன்படி புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது. கூட்டணி ஒப்பந்தப்படி, பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (64) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பைன் கேல் கட்சியின் சைமன் ஹாரிஸ் துணை பிரதமராக பணியாற்றுவார்.

Jan 22, 2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் கார்லோஸ் ஆல்காரஸ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இடையே நடந்த போட்டியில், முதல் செட்டில் ஜோகோவிச் 4-6 என இழந்தார். ஆனால், அடுத்த 3 சுற்றுகளில் அசாதாரணமாக விளையாடி, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Jan 21, 2025

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்ட ஆப்கன் கைதி கான் முகமது விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதாக இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு, 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்தது. டிரம்பின் காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவில் ஆயுள் தண்டனையை அனுபவித்த முகமது கான், தலிபானுக்கு ஈடாக பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைதிகளின் பரிமாற்றம் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. கத்தார் நாட்டின் பங்கு மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆப்கன் அரசு பாராட்டியுள்ளது.

Jan 21, 2025

கானாவில் தங்கச் சுரங்கத்துக்குள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கானாவின் ஒபுவாசி நகரில் உள்ள 'ஆங்கிலோகோல்டு அஸ்யன்டி' தங்க வயலில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, சிலர் தங்கத்தை வெட்டி எடுக்க சுரங்கத்துக்குள் நுழைந்துள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேரை கொல்லும் நிலைக்குள்ளாகியுள்ளனர். சிலர் காயமடைந்தனர். சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம், ஆயுதமற்ற தொழிலாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியது. இது குறித்து கானா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Jan 21, 2025

தைவானில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு தைவானில் இன்று காலை ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ரிக்டா் அளவுகோலில் இதை 6.0 அலகுகளாக பதிவு செய்தது. நிலநடுக்கம், யூஜிங்கின் வடகிழக்கில் 12 கி.மீ. தொலைவுக்கு மையமாக இருந்து, பெரும் அதிர்வினை உருவாக்கியது. இதன் காரணமாக பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டது.

Jan 21, 2025

அமெரிக்காவின் தென் எல்லைகளில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உரையில் அமெரிக்காவின் வெற்றி, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை முன்வைத்து, பலம் வாய்ந்த மற்றும் சிறந்த நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என கூறினார். மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத அகதிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ராணுவம் உலக போர்களில் பங்கேற்காது, ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலிமையடைந்த ராணுவம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறி, அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்கி, நம்பிக்கையுடனும் மக்களுக்கு உரிமைகள் வழங்கும் நாடாக அமெரிக்காவை முன்னேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அமெரிக்காவின் தென் எல்லைகளில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

Jan 20, 2025

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் ஸ்வரேவ் மற்றும் படோசா காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்று மெல்பொர்னில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட்-வுடன் மோதினார். ஆரம்பத்தில் 6-1 என வெற்றி பெற்ற ஸ்வரேவ், இரண்டாவது செட்டில் 2-6 என தோற்றார். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் 6-3, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என செர்பியாவின் ஒல்காவை வென்று காலிறுதியில் இடம் பிடித்தார்.

Jan 20, 2025

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 70 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவை மற்றும் கடுனா நகரை இணைக்கும் சாலையில், 60,000 லிட்டர் பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதி மக்கள், பெட்ரோலுக்காக நெருங்கினர். அப்போது லாரி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பலரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீயில் கருகினராம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, நைஜீரிய ஆளுநர் உமாரு பாகோ கூறினார். நைஜீரியாவில் ரெயில் பாதைகள் இல்லாததால், சரக்குகள் பெரும்பாலும் சாலைகளில் அழுத்தப்படுவதால், விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன.

Jan 20, 2025

சூடானில் உள்நாட்டு கலவரம் காரணமாக நீர்மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது.

சூடானில் ராணுவ ஆட்சி நிலவுகின்றது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இந்த மோதலின் காரணமாக உள்நாட்டு கலவரம் வெடித்து, அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 16-ந்தேதி, தலைநகர் கார்டூம் அருகே உள்ள மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை ராணுவப் படையினர் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் நீர்மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. குறிப்பாக, மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்து, மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தலைநகரின் வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியது. தற்போது, அரசாங்கம் நீர்மின் நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Jan 20, 2025

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினர். இளைஞர்கள் பாலஸ்தீன கொடிகளை தூக்கி ஊர்வலமாக செல்லும் போது, ஹமாஸ் அமைப்பினரும் துப்பாக்கிகளுடன் கார்களில் கொண்டு போர் நிறுத்தத்தை கொண்டாடினர். போரின் போது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள், தற்போது தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எகிப்து எல்லையில் தங்கி இருந்த நிவாரண பொருட்களுடன் கூடிய லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர். இந்த போர் நிறுத்தம் நம்பிக்கை அளிக்கின்ற போதிலும், சண்டை மீண்டும் தொடங்குமா என்ற கேள்விகள் தொடர்கின்றன.

Jan 18, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சில மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.

டிரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், மக்கள் பாதுகாப்பை முக்கியமாக பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சியில் கடுமையான குளிர்பாடான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், வெப்பநிலை மிகவும் குறையும் என்று தெரிவித்தார். இது மக்கள் மற்றும் காவல்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு சிக்கலாக இருக்கலாம். எனவே, 20ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி கேபிட்டால் கட்டிடத்தில் உள்ள ரோடுண்டா அறையில் நடைபெறும் என தெரிகிறது. 1985ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் இதேபோன்று அதே அறையில் பதவியேற்றார். ஆனாலும், பதவியேற்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்றும், அனைத்து நடவடிக்கைகளும் திட்டப்படி நடைபெறும் என்றும் டிரம்ப் உறுதி தெரிவித்தார்.

Jan 18, 2025

ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் போர் காலத்தின்போது, சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து எல்லை பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் முடிவாக, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹமாஸ் அமைப்பினர் 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். அதேபோல் இஸ்ரேல் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு சொந்த கிராமத்திற்கு செல்ல வழியமைக்கவும் ஒப்புக்கொண்டது. ஹமாஸ் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2023ல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது.

Jan 17, 2025

ஆஸ்திரேலியாவில் கடும் புயல் காரணமாக 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று கடுமையான மழை பெய்தது. குறிப்பாக சிட்னி நகரில். இடி, மின்னலுடன் கனமழை பெய்து, பாரமாட்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் விழுந்து, சிட்னி நகர மின்நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், 1¼ லட்சம் வீடுகள் மின்வெட்டில் மூழ்கின. கனமழையினால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் மாயமான நிலையில் காணப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Jan 13, 2025

அங்கோலாவில் காலரா தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலாவில் காலரா தொற்று பரவி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த தொற்று முதன்முறையாக பதிவாகி, அதன் பின்னர் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்ட பரிசோதனைகளில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 லட்சம் மக்கள் வசிக்கும் லுவாண்டா மாகாணத்தில் ககுவாகோ புறநகரில் காலரா பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவரத்தை அங்கோலாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளார்.

Jan 13, 2025

நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசு ஆதரவு படையினர் 21 பேரை கொன்றுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்புகள், குறிப்பாக ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் மற்றும் 'பண்டிட்ஸ்' என்ற கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பண்டிட்ஸ் குழுக்கள் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகள் மற்றும் பணம் கடத்தலில் ஈடுபடுகின்றன. இந்த கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அவை பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் தாக்குகின்றன. ராணுவம் மற்றும் அரசு ஆதரவு பெற்ற படையினர்கள் இந்த குழுக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசு ஆதரவு படையினர் 21 பேரை கொன்றுள்ளனர்.

Jan 11, 2025

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள சஞ்சிதி பகுதியில் அமைந்த நிலக்கரி சுரங்கத்தில், கடந்த முன்தினம் வாயு வெடிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கிடக்கின்றனர். அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27 மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியில், 4 பேரின் உடல்கள் 3,000 அடி ஆழத்தில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 8 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Jan 11, 2025

கனடாவின் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிபரல் கட்சியின் எம்.பி. மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பிறந்த சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார். எக்ஸ் தளத்தில் அவர், "கனடா தனது தலைவிதியை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு சிறிய, திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். சந்திரா ஆர்யா, தனது கன்னட மொழி பேசும் வீடியோ மூலம் அதிக கவனம் பெற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவாளர் ஆவார். தற்போது, கனடாவின் புதிய பிரதமர் பதவிக்கு அவர் மற்றும் முன்னாள் எம்.பி. பிராங்க் பெய்லிஸ் மட்டுமே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 10, 2025

ஈரான் மத தலைவர் அயதுல்லா கமேனி, ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு சட்டவிரோதமானது என்று தெரிவித்தார்.

ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி, அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஈரானுக்கு சென்றார். அவர் தலைநகர் டெஹ்ரானில், ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசினார். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக சிரியாவின் சூழ்நிலைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. அப்போது, அயதுல்லா கமேனி "ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு சட்டவிரோதமானது" என்று தெரிவித்தார். மேலும் அரபு நாடுகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தை அழைத்தார். பின்னர், ஈராக் பிரதமர் சூடானி காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து, இரு நாடுகளுக்கும் ஆதரவு வழங்கும் தனது நாட்டின் கொள்கையை சுட்டிக்காட்டினார்.

Jan 10, 2025

வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசு நாடு திரும்பி பதவியேற்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார். அரசுக்கு எதிராக கராகஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால் பிறகு விடுவிக்கப்பட்டார். நிகோலஸ் மதுரோவுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே அதிகாரப் போட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வன்முறையை ஊக்குவிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Jan 09, 2025

கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுக்க பிரான்ஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் ஆகிய பகுதிகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கவுள்ளாரென்ற தகவல்கள் வந்தன. ஆனால், மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், ராணுவ நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பகுதிகளை கைப்பற்றுவதாக கூறவில்லை என்றார். இதன்மூலம், அமெரிக்கா இவ்வாறு அந்த பகுதிகளை பலவந்தமாக கைப்பற்றும் நோக்கம் கொண்டிருப்பதாக டிரம்ப் மறைமுகமாக குறிப்பிட்டார். இந்நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பேரட் கூறியிருப்பதாவது, ஐரோப்பிய எல்லைகளின் இறையாண்மையை குறைக்கும் வகையில் எந்த நாட்டும் தாக்குதலைச் செய்ய அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

Jan 09, 2025

ஆஸ்திரியாவில், வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரை, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷலன்பர்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி அரசு அமைக்க முடியாததால், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் காா்ல் நெஹமா் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி அரசு அமையவிருப்பது இதுவே முதல்முறை.

Jan 09, 2025

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் வழங்கிய வழக்கில், நியூயார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடையைக் கோரி டிரம்ப் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த பண பரிமாற்றம் தொடர்பான 34 குற்றச்சாட்டுகள் மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபராக இருந்தவருக்கு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது இது முதல் முறை. கடந்த நவம்பர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டிரம்ப் மீண்டும் பதவி ஏற்கவுள்ள நிலையில், இந்த வழக்கின் தண்டனை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது. அதற்காக, டிரம்ப் மனு தாக்கல் செய்ததை மதிப்பாய்வு செய்த மேன்ஹாட்டன் நீதிபதி அதைத் தள்ளுபடி செய்தார்.

Jan 09, 2025

துபாய் விமான நிலையம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சவூதி அரேபியாவில் கனமழை காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத்தில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல கார்கள், பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன. மெக்கா மற்றும் ஜெட்டா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை மற்றும் வானிலை மாற்றங்கள் சவூதி அரேபியாவில் கடுமையாக பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jan 09, 2025

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தாலும், அவை வெற்றியடையவில்லை. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றன. இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். போர் தொடர்ந்து நிலவுவதால், உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

Jan 08, 2025

அமெரிக்காவில் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்ப் 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதன் பொருட்டு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றார். அவரது தாயார் நேரில் இதை காண வந்தார். இதுகுறித்து சுப்ரமணியம் கூறும்போது, விர்ஜீனியாவில் முதல் இந்திய-அமெரிக்க உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன் என்றார்.

Jan 08, 2025

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் முன், ஹமாஸ் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளார்.

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், 251 பேர் பணயக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் அறிவித்து, 117 பணயக் கைதிகளை மீட்டது. ஆனால் 101 இஸ்ரேலியர்கள் தற்போது ஹமாஸ் வசம் பணயக்கைதிகளாக உள்ளனர். தற்போது, காசாவில் 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, பணயக் கைதிகள் மீட்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் முன், ஹமாஸ் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளார்.

Jan 07, 2025

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது.

மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் போன்ற இடங்களில் மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசுவதால் சாலை, ரெயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பனிப்புயல் காரணமாக, மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேரிலெண்ட் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன. பனிப்புயல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jan 07, 2025

காங்கோவில் தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 3 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் தயாரான தங்கம் கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கிவு மாகாணத்தில் சட்ட விரோத தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டனர். அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் கடத்தப்பட்ட வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அந்த வாகனத்தில் இருந்த 3 சீனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Jan 07, 2025

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கனடா தற்போது பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் சூழலில், கனடா மீது அதிக வரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின், நாட்டின் பொருளாதார நிலை, கட்சியில் உள்ள கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடமிருந்து ஆதரவு குறைவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பிரதமராக ட்ரூடோ தொடர்ந்து பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.

Jan 07, 2025

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

நேபாளத்தின் லொபுசே பகுதியில் வடக்கே 93 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, சீனா எல்லை அருகிலுள்ள சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது.பல கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் நேபாளத்தின் உட்பகுதிகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் டெல்லி மற்றும் பீகார் போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இது பிரம்மாண்டமான அதிர்வுகளைக் கொடுத்துள்ள நிலையில், மேலும் சேதம் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

Jan 06, 2025

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், பெலாரசின் அரினா சபலென்கா ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் 4-6 என இழந்த சபலென்கா, அதனை தொடர்ந்து 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் வெல்வது இது முதல் முறை ஆகும்.

Jan 06, 2025

ஆக்லாந்தில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரில் ஒசாகாவின் காயம் காரணமாக விலகினார்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா மற்றும் டென்மார்க்கின் கிளாரா டவ்சன் மோதின. ஒசாகா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றின. ஆனால், இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் காயம் காரணமாக ஒசாகா விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னர், கிளாரா டவ்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Jan 06, 2025

அதிபர் ஜெலன்ஸ்கி கூறியபடி, கடந்த வாரம், 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமான தாக்குதல்கள் உக்ரைன் மீது நடத்தப்பட்டன.

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியபடி, நேற்று ஒரு நாளில் 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த வாரம், 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதல்கள் மேற்கொண்டன. இதில், வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர் மேலும் கூறியதாவது, "ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதலிலிருந்து நாங்கள் நமது வான்வெளியை பாதுகாத்து வருகிறோம்." நேற்றிரவு நடந்த தாக்குதலில் 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன.

Jan 06, 2025

மலேசியாவின் கெடா மாகாண கடற்பகுதியில் படகில் இருந்த 200 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.

மலேசியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக மலேசியாவுக்கு நுழைகின்றனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், இதனை கட்டுப்படுத்த மலேசியா அரசாங்கம் எல்லை பகுதியின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதற்கிணங்க, கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அகதிகளை ஏற்றிக் கொண்டு 2 படகுகள் கடலுக்கு செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், படகில் இருந்த 200 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.

Jan 06, 2025

ஈகுவடாரில் அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ அவசர நிலையை அறிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அதில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை பொது சொத்துகளை சேதப்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன. இதன் விளைவாக, குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி போன்ற 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் பரவியுள்ளது. இதன் காரணமாக, அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ அவசர நிலையை அந்த மாகாணங்களில் அறிவித்துள்ளார். மேலும், 20 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசாரும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Jan 06, 2025

கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதில் 184 பேர் பலியாகியுள்ளனர்.

காசா பகுதியில் நடைபெற்ற போரில் இன்றுவரை சுமார் 45,000 பாலஸ்தீனியர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதோடு லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் பெற்றுள்ளனர். இந்த நிலைமையை கவனித்த உலக நாடுகள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிக்க வலியுறுத்துகின்றன. எனினும், ஹமாஸ் அமைப்பினை முற்றிலும் அழிக்காத வரை போர் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, கடந்த 3 நாட்களில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதில் 184 பேர் பலியாகியுள்ளனர்.

Jan 04, 2025

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 28 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால், ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர். பெரும்பாலும், அவர்கள் கடல் மார்க்கத்திலுள்ள படகுகளில் பயணம் செய்ய முற்படுகின்றனர். ஆனால் இதிலிருந்து பல பயணங்கள் ஆபத்துக்களுடன் முடிகின்றன. கடந்த புதன்கிழமையன்று, துனிசியா இரண்டு படகுகளை ஐரோப்பாவை அடைவதற்காக கடலில் அனுப்பியது. மொத்தமாக 110 பேர் பயணித்த இவை, எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். 83 பேர் கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டனர். இந்த இடம்பெயர்ந்தவர்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என துனிசியாவின் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Jan 04, 2025

காசா முனையின் மத்திய பகுதிகளில் உள்ள காசா, நுசிரத், சவாடா, மஹானி மற்றும் டிர் அல் பலாக் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 42 பேர் உயிரிழந்தனர்.

காசா போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருடன் இணைந்து 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்புகளுக்கும் இடையே போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காசா முனையின் மத்திய பகுதிகளில் உள்ள காசா, நுசிரத், சவாடா, மஹானி மற்றும் டிர் அல் பலாக் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 42 பேர் உயிரிழந்தனர். இதேவேளை, பணய கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் கத்தார் தலைநகர் தோஹாவில் விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது.

Jan 04, 2025

கஜகஸ்தானில் பனிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்து போனதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

கஜகஸ்தானில், அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலை, எப்போதும் பரபரப்பாக இருக்கும். வாகன போக்குவரத்து வழியாக பல வாகனங்கள் திடீரென மோதி விபத்துக்குள்ளாகின. அக்மோலா பிராந்தியத்தில் கோகம் மற்றும் கராடல் கிராமங்களுக்கு மத்தியில் இந்த விபத்து நடந்தது. மோசமான வானிலை மற்றும் பனிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்து போனதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீரமைக்க பணியாற்றுகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Jan 04, 2025

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தேவாலயத்தின் சங்க கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சம்பவம் காரணமாக அங்கு இருந்தவர்கள் அலறி ஓடினர். சம்பவத்திற்கு பிறகு, அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் அல்லது தீவிரப் பாதிப்புகள் ஏற்பட்டவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Jan 04, 2025

பிரிஸ்பேன் ஓபன் தொடரில் டிமித்ரோவ் தாம்சனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார். டிமித்ரோவ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலை வகிக்கும் போது தாம்சன் விலகி, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் டிமித்ரோவ், செக் வீரர் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

Jan 03, 2025

தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்த ஹஸ்ஸம் ஷாவான், நேற்றிரவு ஒரு ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் உள்ளபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பாலஸ்தீனியர்கள் இந்த பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இன்று மாலை தெற்கு காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் சமூகத்தினருக்கான ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை இடைமறித்து முறியடித்துள்ளதாக தெரிவித்தாலும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Jan 03, 2025

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்வீச் தீவில் இன்று காலை 8.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகி, 95 கிலோமீட்டர் ஆழத்தில், 56.29 டிகிரி தெற்கு அச்சரேகை மற்றும் 93.34 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டது. இப்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 470 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவுக்கான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை அல்லது பாதிப்புகளுக்கான தகவல்கள் வெளியாகவில்லை.

Jan 03, 2025

அமெரிக்காவில் டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்பு விழா, வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள், டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேரணி, 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியுடன் தொடர்புடைய இந்த பேரணியின் காரணமாக, வாஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Jan 02, 2025

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் ஒரு இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது டாக்டர் சுலைமான் அல் மஜித் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் உயிரிழந்தனர்.

சுலைமான், பக்கவாட்டில் இணை விமானியாக இருந்தார். அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்ள விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் விமானத்தை பார்வையிட இருந்தனர். விமானம் கடற்கரை அருகில் பறந்த பின்னர் கட்டுப்பாட்டு அறையில் சிக்னல் இழந்து, அவசர தரையிறக்கம் செய்யப்படுகிறது. சுலைமான், இங்கிலாந்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டு, இளநிலை டாக்டர்களுக்கு பயிற்சி வழங்கியவர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Jan 02, 2025

தாய்லாந்து, பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினராக நேற்று இணைந்தது. இதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவால் 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக தாய்லாந்து சேர்வதை உறுதிப்படுத்திய பின்னர், அதன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அமைப்பில் புதிய உறுப்பினராக தாய்லாந்துடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் சேர்கின்றன. 2006-ல் ரஷியாவால் தொடங்கப்பட்ட பிரிக்ஸ், 2011-ல் தென்ஆப்பிரிக்கா சேர்க்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளை இணைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ரஷியா அதன் தலைமையை ஏற்றது.

Jan 02, 2025

இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில், பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதன்படி, நாளை முதல் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி வகுப்புகள் தொடங்கும். ஆனால், 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினால் பள்ளி வேலை நாட்களில் தொடர்ந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, இந்த ஆண்டு (2025) கல்வி வேலை நாட்களுக்கான புதிய அட்டவணை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட அட்டவணை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், புத்த துறவி மடாலயங்களுக்கும் பொருந்தும். புதிய கல்வியாண்டு வருகிற 27-ம் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 02, 2025

ரஷியாவில் 2025-ம் ஆண்டில் 1% சுற்றுலா வரி விதிப்பு துவங்கும்.

ரஷியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் 1% வரி விதிக்கப்படும். 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரஷிய வரி குறியீட்டில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பல சுற்றுலா பகுதிகளில் இது முன்பே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 2025-ம் ஆண்டில் 1% சுற்றுலா வரி விதிப்பு துவங்கும். மேலும் 2027-ல் அது 3% ஆக உயரும். இந்த வரி, ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் வழங்குபவர்களால் செலுத்தப்படுகிறது. ஆனால் அது பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே பயணிகள் தங்குவதற்கான விலையுடன் சேர்க்கப்பட்டு கட்டணமாகும்.

Jan 02, 2025

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக பிரசாரம் நடைபெறுவதுடன், 2017-ல் அதிபராக பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா இதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார். 1960-களின் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்ட மனங்காக்வா, இதை முற்றிலும் நீக்க வேண்டும் என்கிற நோக்கில் பணியாற்றினார். பொதுமன்னிப்பின் படி, அவர் சில மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றினார். சமீபத்தில், நாடாளுமன்றத்தில் மரண தண்டனையை ரத்து செய்யும் மசோதா நிறைவேறி, அதிபர் அதற்கு ஒப்புதல் அளித்தார். இதனால், ஜிம்பாப்வேயில் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது. தற்போது, 60 கைதிகளின் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2005-இல் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Dec 31, 2024

பலாத்கார வழக்கில் டிரம்புக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஆனால், அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1996-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், டிரம்ப் பெண் எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கூறப்பட்டது. டிரம்ப் அவதூறு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து டிரம்ப் மேல் முறையீடு செய்தார். பெடரல் கோர்ட் அதை உறுதி செய்தது. இதனால், அவர் அதிபராக பதவி ஏற்கும் நேரத்தில் இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

Dec 31, 2024

எலான் மஸ்க் ஜெர்மனியில் பொதுத்தேர்தல்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் " ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றம் தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" என்று மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதனை அவர் ஜெர்மன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஜெர்மன் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறியதாவது, "எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். ஜெர்மனி தேர்தலின் முடிவு வாக்காளர்களின் வாக்குகளால் முடிவடைகிறது. இது ஜெர்மனின் உள்ளூர் விவகாரம், அவர் தனது கருத்தை பகிர சுதந்திரம் கொண்டிருக்கிறார். ஆனால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

Dec 31, 2024

தென் கொரிய அதிபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 3ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, அவசர நிலை உத்தரவை திரும்பப்பெற்றார். பிறகு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிபரின் பதவி நீக்கத்திற்கு தீர்மானம் கொண்டுவந்து, வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட யூன் சுக் இயோலை பதவி விலக்கி, ஹாங் டக் சோ இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு, சோய் சங் மோக் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யூன் சுக் இயோலின் நடவடிக்கைகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. தற்போது கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

Dec 31, 2024

பாகிஸ்தானில் சாலை விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 18 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்கு செல்லும் பயணிகள் பஸ், பதே ஜங் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மோசமான காயங்களுடன் இஸ்லாமாபாத்தின் தலைமை மருத்துவமனையில் மாற்றப்பட்டார். போக்குவரத்து காவல் துறையினர் ஓட்டுநரின் அலட்சியத்தையே விபத்துக்கான காரணமாகக் காட்டினர். அதே நேரத்தில், சிந்துவின் நவுஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில் எம்-6 மோட்டார்வேயில் ஒரு லாரியும் வேனும் நேருக்குநேர் மோதியதில் எட்டு பேர் இறந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

Dec 31, 2024

எத்தியோப்பியாவில் லாரி ஆற்றுப் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எத்தியோப்பியாவின் கிராமப்புறங்களில் சமூக நிகழ்வுகளுக்கான போக்குவரத்துக்கு பேருந்துகளைப் பயன்படுப்பதைவிட, லாரிகளை வாடகைக்கு எடுப்பது பொதுவான நடைமுறையாக உள்ளது. அவை மலிவான விலையில் கிடைப்பதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் இவ்வாறு பயணம் செய்கிறார்கள். இந்நிலையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில், ஒரு திருமண நிகழ்வுக்காக 70க்கும் மேற்பட்டோர் லாரியில் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், லாரி ஆற்றுப் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்தபோது, பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Dec 30, 2024

ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரத்தை மீண்டும் ஒருமுறை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், தாலிபான் அரசு புதிய தடையை விதித்துள்ளது. பெண்களை வேலைக்கு அமர்த்தும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் மூடுவதாக தலிபான் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளி செல்லவோ, பெரும்பாலான வேலைகளில் ஈடுபடவோ, பொது இடங்களுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தடையால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான் கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களில் கூட பெண்கள் பங்கேற்பதை தடுப்பது கவலையளிப்பதாக உள்ளது.

Dec 30, 2024

2023-24 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. உலக அளவில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2023-24 ஆண்டுக்கான "சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்" விருதுக்கு ஐ.சி.சி. 4 வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
அந்த 4 வீரர்களில் இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 30, 2024

ஸ்காட்லாந்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி சாண்ட்ரா சாஜு என்பவர் மரணமடைந்தார்.

இந்திய மாணவி சாண்ட்ரா சாஜு, கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு 22 வயதாகிறது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் உள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 6ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் காணாமல் போயிருந்தார். அப்புறம், அவர் கடைசியாக சென்ற சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். டிச.27 அன்று, எடின்பர்கின் நியூபிரிச் கிராமத்தில் ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் காணப்பட்டு, அது சாண்டிராவுடையது என்று போலீசார் உறுதி செய்தனர். அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக இல்லாவிட்டாலும், சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Dec 30, 2024

அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்.

அவருக்கு 100 வயதாகிறது. 1977-1981ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட கார்ட்டர், நேற்று ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கான தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dec 30, 2024

தென்கொரிய விமான விபத்துக்கு அந்நிறுவன தலைவர் மன்னிப்பு கோரினார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு பறந்த விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 85 பேர் உயிரிழந்ததாகத் தொடக்கக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பின்னர், 179 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியூட்டியுள்ளது. மீட்கப்பட்ட இரு பயணிகள் தவிர, மற்றவர்களும் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே, விபத்து குறித்து மன்னிப்பு கோரியுள்ளார். அவர் கூறியது: "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதே எங்கள் முக்கிய முன்னுரிமை. விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும்."

Dec 30, 2024

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தலீபான் அமைப்பின் முகாம்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள வாரிஸ்தான் அகதிகள் பலர் உயிரிழந்ததாக தலீபான் அரசு தெரிவித்தது. இதன் பின்னர், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சில இடங்களில் தலீபான்கள் பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடிகளை தாக்கினர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 8 தலீபான்கள் பலியானதாகவும், பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Dec 30, 2024

நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டார். இதில், அவரின் சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகுவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன், கடந்த ஆண்டு அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது.

Dec 28, 2024

ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று புதிய தேர்தலை பிப்ரவரி 23-ல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலில், கடந்த 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அரசு மெஜாரிட்டி இழந்தது. இந்த சூழலில், பல கட்சிகளின் தலைவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்தனர். ஜெர்மனியின் அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம் தன்னைத் தானே கலைக்க முடியாததால், ஜனாதிபதிதான் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த முடிவெடுக்கிறார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Dec 28, 2024

தென்கொரியாவில் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

தென்கொரியாவில், 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டன. மக்களின் எதிர்ப்பால், அதிபர் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர், எதிர்க்கட்சிகள் பதவிநீக்கம் தீர்மானம் தாக்கல் செய்தன. ஆனால் ஆளுங்கட்சியின் வாக்களிப்பின்மையால் அது தோல்வியடைந்தது. பிறகு, 2-வது முறையாக பதவிநீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, 204 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். இன்று, அவரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் 192-0 என்ற வாக்கெடுப்பில் நிறைவேறி, ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

Dec 28, 2024

அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில், ரஷியாவின் பல நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணை தாக்குதலால் விமானம் தாக்கப்பட்டு விழுந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பாக்கூவில் இருந்து 67 பயணிகளுடன் கிரோஸ்னி நோக்கி புறப்பட்ட எம்ப்ரயா்-190 ஏஆா் விமானம், அக்தெள நகரத்திற்கு அருகே தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். முதலில் பறவைகள் மோதியதாக கருதப்பட்டாலும், ரஷியாவின் வான்பாதுகாப்பு தாக்குதலால் விழுந்தது என சந்தேகிக்கப்படுகிறது.

Dec 28, 2024

மொராக்கோ கடல்பகுதியில் ஒரு படகு மூழ்கி 69 அகதிகள் உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பர் 19-ந் தேதியன்று, 80 பேருடன் பயணித்த அந்த படகு, ஸ்பெயினை நோக்கி செல்லும்போது மொராக்கோ கடலில் மூழ்கியது. இதில் 69 பேர் பலியாகினர்.

அதில் 25 பேர் மாலி நாட்டினராவர். மேலும், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடி, 11 பேர் மீட்கப்பட்டனர். அதில் 9 பேர் மாலி நாட்டினர். மாலியில் ஜிகாத் மற்றும் பிரிவினைவாத வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனர். மொராக்கோ மற்றும் ஸ்பெயின் இடையே 14 கி.மீ தூரம் உள்ளதால், அகதிகள் அங்கிருந்து படகில் பயணிக்கின்றனர்.

Dec 27, 2024

தீவிர வலதுசாரி ஆர்வலரும் டிரம்ப் ஆதரவாளருமான லாரா லூமர், தெற்காசியாவில் இருந்து குடியேறியவர்களை "மூன்றாம் உலகப் படையெடுப்பாளர்கள்" என்று குறிப்பிட்டு பெரிய சீற்றத்தை ஏற்படுத்தினார். அவர், வெள்ளை மாளிகையில் ஸ்ரீராம் கிருஷ்ணனை AI ஆலோசகராக நியமித்ததை கடுமையாக விமர்சித்தார் மற்றும் H-1B விசா திட்டத்தை நீட்டிப்பதை எதிர்த்தார். இந்த கருத்துகள் டிரம்பின் கூட்டாளிகளான எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி உட்பட பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குறிப்பாக, அவருக்கும் எலோன் மஸ்க்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

1993 இல் பிறந்த லூமர், புளோரிடாவில் இரண்டு முறை அரசியல் போட்டிகளில் தோல்வியடைந்தார். கமலா ஹாரிஸ் மற்றும் இஸ்லாம் மீது அவர் மேற்கொண்ட தாக்குதல்கள் உள்ளிட்ட பிளவுபடுத்தும் கருத்துக்கள், அவதூறு மற்றும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது. இவ்வாறு, சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பரவலாக அறியப்படும் லூமர், Facebook மற்றும் Uber போன்ற சமூக ஊடக தளங்களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dec 27, 2024

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில நேரங்களுக்கு இராணுவச் சட்டத்தை விதித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹான் டக்-சூ தென் கொரியாவின் தலைவர் என்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகள், ஹான் டக்-சூ மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த வாக்கெடுப்பை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதனால், தென் கொரியாவின் தேசிய சட்டமன்றம், 192-0 என்ற வாக்குகளுடன் செயல் தலைவர் ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்தது.

இந்த நிலை நிகழ்வு தென் கொரியாவின் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கி, அதன் உலகளாவிய நற்பெயருக்கு தீங்கு விளைவித்துள்ளது.

Dec 27, 2024

அமெரிக்க அரசு H-1B விசா முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள 7% விசா கேப் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 100 ஆண்டுகள் வரை நீண்ட தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த சீர்திருத்தங்கள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், அமெரிக்க தொழில்நுட்பத் துறைக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் விவேக் ராமசாமி, தகுதி அடிப்படையிலான சீர்திருத்தங்கள், நியாயமான விசா ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், இதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, 7% விசா கேப் அகற்றப்படுவதால், அமெரிக்க தொழில்நுட்ப திறமையை அதிகரிக்க முடியும், ஆனால் வேலை போட்டி மற்றும் தவறான பயன்பாடு குறித்த கவலை எழுவதாக கூறப்படுகிறது.

Dec 27, 2024

சீனா, இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்ட உத்தேசம் உள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் வழியாக ரூ.11 லட்சம் கோடியில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. சீன அரசு இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, சாங்போ நதியின் கீழ்மட்ட பகுதியில் நீர்மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அணை, அருணாசல பிரதேசம் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம், சீனாவின் 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு இந்தியா-சீனா நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டு, இந்த நதிகளின் நிலை குறித்த தகவல்களை பரிமாறுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட விவகாரங்களை விவாதிக்கிறது.

Dec 27, 2024

காசாவில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.

காசா போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா நகரின் சைடவுன் பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காசாவின் அல் அவ்தா மருத்துவமனை அருகே, 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக, காசாவில் 10 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்ததாக அறியப்படுகிறது.

Dec 27, 2024

சிரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 14 பாதுகாப்புப்படையினர் பலியாகினர்.

சிரியாவின் கிர்பெத் அல்-மாஸா பகுதியில், முன்னாள் ஆட்சி அதிகாரி முகமது கன்ஜோ ஹசனை கைது செய்ய பாதுகாப்புப்படையினர் ரோந்து குழுவினை அனுப்பினர். இதற்கு பதிலாக, ஹசனின் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் போராளிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலாக தாக்குதல் நடத்தினர். இதில் 14 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். 3 போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, 8ம் தேதி பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் ஆட்சியை கைப்பற்றியது.

Dec 27, 2024

பாகிஸ்தானில் மே 9 கலவரம் தொடர்பாக மேலும் 60 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2023 மே 9-ம் தேதி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களுக்கு தொடர்புடைய வழக்குகள் ராணுவ நீஎதிமன்றங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் 25 பேருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும், 60 பேருக்கு கூடுதலாக 2 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதில், இம்ரான் கானின் உறவினரான ஹசன் கான் நியாசிக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

Dec 27, 2024

மொஸாம்பிக்கில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 33 பேர் உயிரிழந்ததும், 1,534 கைதிகள் தப்பியோடியதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடைபெற்று வந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக நடந்தது. மபுடோவில் சிறைச்சாலைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை உருவாக்கி சிறையில் இருந்த கைதிகள் தப்பியோடினர். இதில் 33 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். மேலும் 1,534 கைதிகள் தப்பினார்கள். இதில் 150 பேரை மீண்டும் கைது செய்தனர். இதேபோல், மற்ற சிறைகளிலும் வன்முறைகள் நடந்தன. தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்துள்ளன.

Dec 26, 2024

கனடா அரசு, நியமன கடிதத்திற்கு வழங்கப்படும் கூடுதல் புள்ளிகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம், கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் குடியுரிமை பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி தகவலாக உள்ளது.

போலி நியமன கடிதங்களைப் பயன்படுத்தி பலர் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததுதான் கனடாவின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். ஆனால், இந்த மாற்றத்தால் கனடாவில் ஏற்கனவே வேலை பார்த்து வரும் பல இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

Dec 26, 2024

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கையுடன் தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப் தனது Truth வலைதளத்தில், “அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை மாற்றி, வேயின் கிரேட்ஸ்கியை பிரதமராக்குவேன். இதனால் வரி குறையும். ” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

2025 அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2015-ம் ஆண்டு முதல் கனடா பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ மீது, பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், "நான் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரரான வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்” என்ற டிரம்பின் பகடி உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

Dec 26, 2024

ஜெர்மனியில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜெர்மனியில் படிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2024-2025 கல்வியாண்டில் மட்டும் 4 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் ஜெர்மனியில் படிக்க வந்துள்ளனர். இந்த நிலையில், ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள், சர்வதேச மாணவர்களை ஜெர்மனிக்கு வருமாறு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெர்மனியில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சமாளிக்க, சர்வதேச மாணவர் விசாக்களை துரிதப்படுத்துவது மிகவும் அவசியம் என்று ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் கூறுகின்றன. சர்வதேச மாணவர்கள் ஜெர்மனியில் படித்து முடித்துவிட்ட பிறகு, அவர்களுக்கு அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் தொழிலாளர் பிரச்சனை பெருமளவு தீரும் என்று கூறுகின்றனர்.

Dec 26, 2024

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 2025 இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறைபடி நடக்கும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல், துபாயில் நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. மேலும் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:

பிப்ரவரி 19, 2025: 2:30 PM, கராச்சி - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
பிப்ரவரி 20, 2025: 2:30 PM, நடுநிலை - பங்களாதேஷ் vs இந்தியா
பிப்ரவரி 21, 2025: 2:30 PM, கராச்சி - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 22, 2025: 2:30 PM, லாகூர் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
பிப்ரவரி 23, 2025: 2:30 PM, நடுநிலை (துபாய்/கொழும்பு) - பாகிஸ்தான் vs இந்திய
பிப்ரவரி 24, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - பங்களாதேஷ் vs நியூசிலாந்து
பிப்ரவரி 25, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 26, 2025: 2:30 PM, லாகூர் - ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
பிப்ரவரி 27, 2025: 2:30 PM, ராவல்பிண்டி - பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
பிப்ரவரி 28, 2025: 2:30 PM, லாகூர் - ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மார்ச் 1, 2025: 2:30 PM, கராச்சி - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து
மார்ச் 2, 2025: 2:30 PM, நடுநிலை - நியூசிலாந்து vs இந்தியா
மார்ச் 4, 2025: 2:30 PM, நடுநிலை - அரையிறுதி (A1 vs B2)
மார்ச் 5, 2025: 2:30 PM, நடுநிலை - அரையிறுதி (B1 vs A2)
மார்ச் 9, 2025: 2:30 PM, லாகூர் - இறுதிப் போட்டி

Dec 26, 2024

ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஜப்பான் ஏர்லைன்ஸ், வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சம்பவம் உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலினால் 14 உள்நாட்டு விமானங்களின் சேவை தாமதம் அடைந்தது. மேலும் சில சர்வதேச விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கோளாறை சரி செய்த பின்னர், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். சைபர் பிரச்சினைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் வாங்கிய பயணிகளின் முன்பதிவு செல்லுபடியாகும்.

Dec 26, 2024

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.

இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்களே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தியதால், அந்த பகுதி சூழ்நிலையே பதற்றமானதாக மாறியுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையே மேலும் இழுப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Dec 26, 2024

கஜகஸ்தானில் விமானம் நிலை தவறி விழுந்து வெடித்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

அசர்பைஜானின் பாகு நகரிலிருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட 67 பயணிகள் கொண்ட விமானம், கஜகஸ்தானின் வான்பரப்பில் பனிமூட்டத்தால் பிரச்சினைகளில் சிக்கியது. விமானி, அக்டாவ் நகரில் அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோது, பறவைகள் விமானத்துடன் மோதின. அதன் பிறகு, விமானம் வேகமாக தரையிறக்க முயற்சிக்கபட்டபோது, திடீரென விமானம் நிலை தவறி விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

Dec 26, 2024

வழுக்கை கழுகு தற்போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வழுக்கை கழுகு முதன்முதலில் வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்ட இந்த கழுகு, அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறது. இக்கழுகு அமெரிக்க வரலாற்றில் 240 ஆண்டுகளுக்கு மேலான தொடர்புடன் உள்ளது. இதனால், வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், வழுக்கை கழுகு தற்போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Dec 26, 2024

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ரோகித் கோடரா பொறுப்பேற்றுள்ளார். ரோகித் கோடரா கூறியபடி, சுனில் யாதவ், அங்கித் பாது என்கவுன்டரில் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக அவர் பழிவாங்கப்பட்டார். சுனில் யாதவ் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, அவர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்திருந்தார். சமீபத்தில் ராஜஸ்தான் காவல்துறை அவன் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

Dec 24, 2024

2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது, மேலும் இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்தும் என திட்டமிடப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியது. இதனால், ஐசிசி அறிவிப்பின் படி, இந்திய அணி விளையாடும் போட்டிகள் பொதுவான இடங்களில் நடைபெறும்.

இதனால், 2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி மற்றும் பிசிசிஐ இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க, ஐக்கிய அரபு அமீரகத்தை பொதுவான இடமாக தேர்வு செய்துள்ளது.

Dec 24, 2024

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் திடீரென அனைத்து உள்நாட்டு விமானங்களையும் நிறுத்தியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இந்த தகவலை உறுதிப்படுத்தியது. இந்த திடீர் நிறுத்தத்தால் ஏராளமான பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட முடியாமல் தவித்தனர்.

விமானங்கள் தாமதமாகி, ஏற்கனவே ஏறிவிட்ட பயணிகள் மீண்டும் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பல பயணிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், இந்த பிரச்சனை குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விரிவான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யும் பணியில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காலை 8 மணிக்குள் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு, விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

Dec 24, 2024

டிசம்பர் 24 அன்று, ஈபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்திற்கும் மேல் பகுதிக்கும் இடையே லிஃப்ட் மின்சார லைனில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. அதனால், அனைத்து பார்வையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள், எந்தவித தீ அபாயமும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், கோபுரம் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாரிஸின் பிரபலமான நோட்ரே டேம் கதீட்ரல், 2019 இல் ஏற்பட்ட அதிபயங்கர தீ விபத்தில் இருந்து மீண்டு, முதல் முறையாக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு, பாரிஸ் நகரின் வரலாற்று பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Dec 24, 2024

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளார்.

இதன் மூலம், 40 பேரில் 37 பேருக்கு பரோலில் வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடன், குற்றவாளிகளின் கொலைகளை வன்மையாகக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளாா். ஆனால், மத்திய அளவில் மரண தண்டனை விதிப்பது தவறாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டில் இருந்து மத்திய நீதிமன்றங்களில் மரண தண்டனைகள் நிறைவேறவில்லை. ஆனால் 2020-ல் டிரம்ப் ஆட்சியில் அவை நிறைவேற்றப்பட்டன. பைடன், டிரம்ப் பொறுப்பேற்றதற்கு முன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Dec 24, 2024

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை முதன்மையாக நியமித்து வருகின்றார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள ஸ்ரீராம், தற்போது ஏ.ஐ. துறையில் அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்கப் போகிறார். அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன், தமிழரான சென்னை காட்டாங்கொளத்தூர் வாழ் மாணவர், பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்சுடன் பணியாற்றியவர்.

Dec 24, 2024

வட கொரியா ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கு சிறப்புப் படை வீரர்களை அனுப்பும் ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஆயுதங்களை, குறிப்பாக ட்ரோன்களை, ரஷியாவுக்கு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950-ஆம் ஆண்டு கொரிய போர் மற்றும் அதன் பின் அமெரிக்காவின் தென் கொரியாவுக்கு வழங்கிய பாதுகாப்பு உதவி தொடர்ந்தாலும், வட கொரியா ரஷியாவுடன் நட்பு நிலை வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைன், ரஷியாவில் 12,000 வட கொரிய ராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டதாக கூறியுள்ளன. தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம், ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரிய வீரர்களின் உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

Dec 24, 2024

வங்காளதேசம், இந்தியாவிடம் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.

வங்காளதேசத்தில் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால், வங்காளதேசத்தை விட்டு இந்தியாவுக்கு தஞ்சம் அடைந்தார். இதனால் அவரது அரசு கவிழ்ந்தது. 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, வேறு நாட்டில் அரசியல் புகலிடம் பெறாததால் இங்கு உள்ளார். இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது இணைப்பாளிகளுக்கு எதிராக பல குற்றவியல் வழக்குகள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பதிவானது. இதனால், வங்காளதேசம், இந்தியாவிடம் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.

Dec 24, 2024

கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தில் உள்ள லொஸோவா மற்றும் க்ரஸ்னோயே கிராமங்களை உக்ரைனின் கையிலிருந்து ரஷிய ராணுவம் மீட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம், உக்ரைன் நாடு நேட்டோவுடன் இணைவதை எதிர்த்து, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தது. அந்தப் போரின் ஆரம்பத்தில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் பல மாகாணங்களில் ரஷியா இடங்களை கைப்பற்றியிருந்தது. சில மாதங்களாக கிழக்கு உக்ரைனில் ரஷியா புதிய நிலப்பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வருகிறது. இந்நிலையில் இரண்டு கிராமங்களும் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

Dec 23, 2024

தென் கொரியா தனது மூன்றாவது ராணுவ உளவுச் செயற்கைக்கோளை டிசம்பர் 21 அன்று அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கலிஃபோர்னியாவின் வாண்டென்பர்க் விண்வெளி மையத்தில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம், தென் கொரிய நேரப்படி இரவு 8:34 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் செல்லப்பட்டது. 2025 இறுதிக்குள், வட கொரியாவை கண்காணிக்க 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான திட்டத்தில், இதுவரை இரண்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன. மேலும், தென் கொரியா அமெரிக்காவின் உதவியுடன், தற்போது தனது உள்நாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றியடைந்துள்ளது.

Dec 23, 2024

இந்திய பயணத்தை நிறைவு செய்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 15 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் சென்ற திசநாயக, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீனவர்களின் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக்கொண்டதாக மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டில், ஜனவரியில் சீனாவுக்கு அரசு பயணமாக செல்லத் திட்டமிடுகிறார் திசநாயக. சீன முதலீடுகள் இலங்கையில் அதிகம் இருப்பதால், இலங்கை மற்றும் சீன அதிபர்களின் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Dec 23, 2024

ரஷ்யாவில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது.

ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன, இவை சுமார் 9 ஆயிரம் டன் எரிபொருள் கொண்டிருந்தன. அனபா பகுதியில் புயல் தாக்கியபோது, இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின. இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. தற்போது, 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் பரவியுள்ளதுடன், அந்த எண்ணெய் கசிவு காரணமாக 2 டால்பின்களும் செத்து கரையில் ஒதுங்கியுள்ளன. கச்சா எண்ணெய் கடலில் பரவுவதைத் தடுக்க, அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Dec 23, 2024

உக்ரைனின் விமானப்படை இன்று ரஷிய படைகளின் தாக்குதலை முறியடித்துள்ளது.

ரஷிய வான்வழி தாக்குதலுக்கு ஷாகித் போன்ற ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், 103 ஆளில்லா விமானங்கள் ஈடுபட்டன. அவற்றில் 52 விமானங்களை உக்ரைனின் விமானப்படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலின் காரணமாக உக்ரைனில் உள்ள சில தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Dec 23, 2024

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீ இன்னும் சில வாரங்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் கிராம்பியான்ஸ் தேசிய பூங்காவில் 16 டிசம்பருக்குள் மின்னல் தாக்கியதில் தீ ஏற்பட்டது. மேலும் காற்றும் வெப்பமும் தீ பரவலை மிகையாக்கியது. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தீ மூன்று மடங்காக பரவியது. 300 தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தினால் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அந்தக் காட்டுத்தீ மேலும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 6 நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது 34,000 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது.

Dec 21, 2024

11-வது புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றன.

11-வது புரோ கபடி லீக் தொடர் அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது, மேலும் அதன் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்தன. இப்போது, புனே நகரில் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது, இதனால் புனேரி பால்டனின் பிளே ஆப் வாய்ப்பு தகர்க்கப்பட்டது.

Dec 21, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது, அனைத்து ஆட்டங்களையும் துபாயில் நடத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டது. இதன் பின்னர், ஐ.சி.சி. இந்தியாவின் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dec 21, 2024

இலங்கை கடற்படையினர், நடுக்கடலில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகளை மீட்டுள்ளனர்.

இதில் 25 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட, 102 பேரும் இலங்கை வடக்கு கடற்பகுதியில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி படகில் தத்தளித்த இந்த அகதிகள் குறித்து இலங்கை கடற்படைக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில், கடற்படையினர் மீண்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இலங்கை கடற்படையின் செய்திதொடர்பாளர் கயன் விக்ரமசூரியா, மீட்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறினார். அவர்களின் மொழி புரியவில்லை என்றாலும், அவர்கள் ரோஹிங்கியா அகதிகளே என்றும், மியான்மர் நாட்டைச் சார்ந்தவர்கள் என கடற்படை நம்புகின்றது. 2022-ஆம் ஆண்டில் இதே போல 100 ரோஹிங்கியா அகதிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.

Dec 21, 2024

நேபாளத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்டது. மேலும் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் ஏற்படவில்லை. அதேபோல், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நேபாளத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.

Dec 21, 2024

நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள டேடன் நகரில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முதல், விமானப்படைத்தளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துவருகின்றன. அதே நேரத்தில், நியூயார்க், நியூஜெர்சி, யுடா போன்ற மாகாணங்களிலும் விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைத்தளங்கள் அருகே இதேவிதமாக டிரோன்கள் பறந்துவருகின்றன. இந்த மர்ம டிரோன் சம்பவங்களில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால், நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Dec 21, 2024

ஜெர்மனியில் உள்ள மக்டக்பெர்க் நகரில் ஒரு கார் வேகமாக சந்தைக்குள் புகுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனியில் உள்ள மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு, அங்கு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் வேகமாக சந்தைக்குள் புகுந்து வாகனத்தில் பயணித்தவர்களை மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கார் விபத்தை ஏற்படுத்திய 50 வயதான சவுதி அரேபியாவை சேர்ந்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Dec 21, 2024

குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப்பில் நேற்று காலை 9.30 மணியளவில் ஒரு இளைஞர் பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான்.

அதில் ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது வீடியோவில் மாணவர்கள் அலறியடித்து ஓடுவது பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரை பிடித்து கைது செய்தனர். தற்போது அவர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது.

Dec 20, 2024

பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடரில் ரியல் மாட்ரிட் 3-0 என்ற கணக்கில் வெற்றி

பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் மற்றும் மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின. ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில், 53-வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோல் அடித்தார், மேலும் 84-வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) கோல் அடித்து அதிக முன்னிலை பெற்றார். பச்சுகா அணியினர் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Dec 20, 2024

வினிசியஸ் உலகின் சிறந்த ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கின்றது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற வீரர்களின் விருதுகள், தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகரமான தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில், பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார். 24 வயதான வினிசியஸ் ஜூனியர், 2016-ம் ஆண்டில் தொடங்கிய இந்த விருதை வென்ற முதல் பிரேசில் வீரராக பெருமையுடன் கொண்டாடினார். அவர் 48 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடம், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்றனர்.சிறந்த வீராங்கனையாக, ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்தும் 2-வது முறையாக விருதை வென்றார்.

Dec 20, 2024

துனிசியாவின் மத்தியதரைக் கடலோர பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஸ்ஃபாக் பகுதியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. கடலோரக் காவல் படை ஐந்து பேரை மீட்டனர். 20 உடல்களை மீட்டது. அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்குள்ளானபோது படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் பற்றிய தகவல் தெரியவில்லை. கடல் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து துனிசியா மேற்கொண்டிருந்தாலும், அகதிகளின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

Dec 20, 2024

கிரீஸுக்கு புலம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு படகு, காவ்டோஸ் தீவின் அருகே கவிழ்ந்தது.

படகு மூழ்கத் தொடங்கியதில் 150 பேர் மீட்கப்பட்டனர். ஆனால் 35 பேர் காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காணாமல் போனவர்கள் எல்லாம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்ஐஏ, சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்துள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மனித கடத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு 60,000 புலம்பெயர்ந்தோர் கிரீசுக்குச் சட்டவிரோதமாக வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Dec 20, 2024

தைவானின் தாய்சங் நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் தீப்பற்றியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

தைவானின் தாய்சங் நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டின் உணவு பதப்படுத்தும் பிரிவுக்கான புதிய கட்டிடத்தில் தீப்பற்றியது. 5 தளங்களைக் கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ தீவிரமாக பரவி எரிந்தது. இதில், வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியபடி வெளியேறினர். சிலர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிக்கியவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். தீப்பற்றிய பகுதி அருகில் அதிக அளவு பஞ்சு பேனல்கள் இருந்ததால், தீ வேகமாக பரவியது என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Dec 20, 2024

ரஷிய அதிபர் புதின், டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார்.

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப், போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று கூறியிருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, டிரம்ப் உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பாக இருக்கலாம் என்று தெரிவித்தார். இந்நிலையில், ரஷிய அதிபர் புதின், டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Dec 19, 2024

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், இந்தியாவின் வரி விதிப்பை கடுமையாக விமர்சித்து, சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவர், இந்தியா அதிக வரி விதித்தால், அதற்கேற்ற பதிலடி அளிக்கும் என மிரட்டினார். இதனை அடுத்து, சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளுடன் நடத்தப்பட்ட உரையாடலின்போது, அதிக வரி விதிப்பது சரி என்றால், அமெரிக்கா அதே அளவு வரி விதிப்பதாக கூறினார். மேலும், அமெரிக்க எல்லையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் அகதிகள் புலம்பெயர்தல் தொடர்ந்தால், கனடா மற்றும் மெக்சிகோ இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Dec 19, 2024

ஜமைக்காவில் பிராவிடன்ஸ் தீவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்ததில் தமிழகத்தை சேர்ந்தவர் பலியானார்.

ஜமைக்காவின் பிராவிடன்ஸ் தீவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது மூன்று நண்பர்கள், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகியோர். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து, துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது கொள்ளையர்களின் தாக்குதலை இவர்கள் எதிர்கொண்டனர். இதில் விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்னேஷின் பெற்றோர்கள், அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டுவர கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Dec 19, 2024

நைஜீரியாவின் பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் ஒயொ மாகாணம், பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, நேற்று அந்த பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். பரிசு பொருட்களும் வழங்கப்பட இருந்ததால், கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்பாராத இந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 18, 2024

கேரம் உலகக் கோப்பை சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர். இதில் காசிமா தனியாக தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளார். கேரம் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கும் என அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கும் ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Dec 17, 2024

ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோ வெடிவிபத்தில் உயிரிழந்தார்.

ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று அதிகாலை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது. இதில், ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்ததாக ரஷியாவின் விசாரணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் கிரில்லோவின் உதவியாளர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கிரில்லோவின் மீது முன்பு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

Dec 17, 2024

கனடாவின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட், தனது பதவியையும் நிதி மந்திரி பதவியையும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கான விளக்கமாக, அவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எழுதிய கடிதத்தில், கனடா தற்போது பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் பிரதமருக்கும் கனடாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், அதனால் மந்திரிசபையில் இருந்து விலகுவது மட்டுமே சரியான வழி என தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் பிரீலேண்ட் கூறியுள்ளார். இதற்கிடையில், கனடா வீட்டு வசதி துறை மந்திரி சீயன் பிரேசர் நேற்று ராஜினாமா செய்தார்.

Dec 17, 2024

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடந்தது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது, துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் உயிரிழந்துவிட்டான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பள்ளி சமூகத்தில் அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.

Dec 17, 2024

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார்.

ஜெர்மனி, ஐரோப்பிய யூனியனில் அதிக மக்கள் தொகையும் மிகப்பெரிய பொருளாதாரமும் கொண்ட நாடாக உள்ளது. ஆனால், இந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், நவம்பரில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தனது நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதினால், ஆளுங்கட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 733 இடங்கள் கொண்ட பன்டேஸ்டாக் கீழ்சபையில் 207 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார். 394 பேர் அவரது எதிராக வாக்களித்தனர். இதனால், 2025 பிப்ரவரி மாத இறுதியில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Dec 17, 2024

வானுட்டு தீவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுட்டு தீவு. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

Dec 17, 2024

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சுப் பிரதேசமான மயோட்டியை சிடோ என்ற பயங்கர சூறாவளி சனிக்கிழமை தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய புயல் காற்று, வீடுகளை தரைமட்டமாக்கியதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தையும் முழுமையாக துண்டித்துள்ளது. உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பலர் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சூறாவளியின் தாக்கத்தால் மூடப்பட்டுள்ள விமான நிலையத்தை வியாழக்கிழமை வரை திறக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

சுமார் 3,20,000 மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்காவின் மயோட்டி நகரம், பிரான்ஸ் கீழ் உள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட சிடோ சூறாவளி, கடந்த 90 ஆண்டுகளில் பதிவான சக்தி வாய்ந்த புயலாகும். எனவே, பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக 400 ஜென்டர்ம்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் படையினரை மயோட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளித்துள்ளார். மேலும், விரைவில் மயோட்டிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Dec 17, 2024

தமிழ்நாடு அரசு, குகேஷிற்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 18 வயதினிலேயே உலக சாம்பியன் பட்டம் வெற்றியுற்ற குகேஷுக்கு பெருமை கிடைத்துள்ளது.
இதற்கான வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இருந்து வந்துள்ளன, அவற்றில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்தமிழ்நாடு அரசு, குகேஷை சென்னை திரும்பும் போது அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லவாக வாகனம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மாநில கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர்.

Dec 16, 2024

அமெரிக்காவில் கார் விபத்தில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பலியானார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் - ரமாதேவி ஜோடியின் மகள், 26 வயதான நாக ஸ்ரீ வந்தனா பரிமளா. இவர் 2022ம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள பல்கலையில் சென்றார். படிப்பு முடிவிற்கு பிறகு அங்கு பணியாற்ற திட்டமிட்டிருந்த அவர், கடந்த வாரம் நண்பர்களுடன் காரில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பரிமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு நண்பர்கள், பவன் மற்றும் நிகித், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 16, 2024

தாய்லாந்து திருவிழாவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 3 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் நடந்த வருடாந்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் கைகலப்பு ஏற்பட்ட போது, சிலர் வெடிகுண்டு வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். இந்த வெடிப்பில் 3 பேர் உடல் சிதறி பலியாகினார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Dec 16, 2024

மயோட்டே தீவில் சிண்டோ புயல் காரணமாக 11 பேர் பலியாகினர்.

மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவின் மக்கள் தொகை 3 லட்சத்து 20 ஆயிரம். மடகாஸ்கரின் அருகில் உள்ள மயோட்டே, கனமழையுடன் வீசிய புயலால் பெரும் சேதத்தை சந்தித்தது. பல வீடுகள் சேதமடைந்தன, மின்கம்பங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Dec 16, 2024

இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன், மும்பையில் பிறந்தவர். பல திரைப்படங்களில் தபேலா இசை அமைத்து பிரபலமானார். உலகளாவிய புகழ் பெற்ற இவர், 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளால் அவரை கவுரவித்துள்ளது. 73 வயதான ஜாகிர் உசைன், தற்போது அமெரிக்காவில் வாழ்ந்தார். சமீபத்தில், நெஞ்சுவலி காரணமாக அவர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்டது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Dec 16, 2024

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது, கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமாகி விட்டதாக விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஹசீனாவின் அரசில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உண்மையை வெளிக்கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையில், மக்கள் மாயமானது 3,500-க்கும் மேற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Dec 14, 2024

பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடத்த ஐசிசி முயற்சியினை முன்னெடுத்தது.அந்தந்த நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில், ஐசிசி ஹைபிரிட் மாடல் மூலம் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் 2026-ல் டி20 போட்டிகள் இடம்பெறாது, அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்தியா தகுதி சுற்றில் வெளியேறினால், அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களில் நடத்தப்படும். 2027-க்கு பின்பு, பாகிஸ்தானுக்கு பெண்கள் ஐசிசி தொடரை நடத்த அனுமதி அளிக்கப்படும்.

Dec 14, 2024

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளது.

கடந்த 3-ஆம் தேதி, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய யூன் சுக் இயோல், பெரும் அதிர்வலைையை ஏற்படுத்தினார். இந்நிலையில், இது அவரது பதவி நீக்கத்துக்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதிபர், நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள், யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

Dec 14, 2024

சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் இன்று காலை 5.08 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 110 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 35.28 டிகிரி தெற்கு மற்றும் 70.65 டிகிரி மேற்கு அட்சரேகைகளில் உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை. முன்பு, கடந்த மாதம் 8-ம் தேதி, மேற்கு சிலியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Dec 14, 2024

மியான்மரில் இன்று காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதன் மையம் 25.47 டிகிரி வடக்கு மற்றும் 97.02 டிகிரி கிழக்கு அட்சரேகைகளில் உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்பு, மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dec 14, 2024

ரஷிய ராணுவம் உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் ரஷிய தாக்குதலுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. நேற்று நள்ளிரவு முதல், உக்ரைனின் மேல் பல்வேறு ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக பாலிஸ்டிக் கின்ஸால் ஏவுகணைகள் மூலம் மேற்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Dec 14, 2024

அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷியா-உக்ரைன் போரின் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகிறது. சமீபத்தில், உக்ரைனுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, ரஷிய அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தார். இது போரை மேலும் தீவிரமாக்கியது. இதன் பிறகு, அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த உதவியை, புதிய ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பொறுப்பேற்கும் நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Dec 14, 2024

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று ஈராக் சென்றார்.

தலைநகர் பாக்தாத் சென்ற பிளிங்கன் ஈராக் பிரதமர் முகமது அல் சுடனியை சந்தித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர், சிரியாவில் நடைபெற்ற ஆட்சி மாற்றம், ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் ஆண்டனி பிளிங்கனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அவரது ஆட்சிகாலத்தில் மத்திய கிழக்கில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஈராக் சென்றுள்ள பிளிங்கன் முன்னதாக ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 14, 2024

அமெரிக்க வெளியுறவுத்துறை, ஜார்ஜியா அரசாங்கத்தின் 20 அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள், தனியார் நபர்களுக்கு விசா தடைகள் விதித்துள்ளது.

இவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை குறைத்துக் கொண்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கின்றது. இந்தத் தடைகள் கொண்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஜார்ஜியாவில் ஜனநாயகத்தை பாதிப்பவர்களுக்கு எதிரான பொருளாதார தடைகள் உட்பட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதற்கு முன்னதாக, 2028-ம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்து, அந்த ஒன்றியத்தின் நிதி உதவியையும் ஜார்ஜியா பிரதமர் இராக்லி கோபாகிட்சே நிராகரித்துள்ளார்.

Dec 13, 2024

தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ், கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன், குகேஷ் உலகின் இளம் செஸ் சாம்பியன் ஆனார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த வெற்றிக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் (ரூ. 20 கோடி) என கூறப்படுகிறது. இந்த தொகை 2 லட்சம் டாலர்கள் (ரூ. 1.68 கோடி) வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டிக்கான பரிசாக வழங்கப்படுகிறது. குகேஷ், 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ரூ. 5 கோடியே 4 லட்சம் பெறுவார். மீதம் உள்ள தொகை, குகேஷ் மற்றும் டிங் இடையே பகிரப்படும், இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள் (ரூ. 11 கோடி) பெறுவார்.

Dec 12, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ், லிரெனின் இடையேயான போட்டிகள் டிராவில் முடிந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீனாவின் நடப்பு சாம்பியன் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் சிங்கப்பூரில் நடக்கிறது. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 12 சுற்றுகள் முடிந்துள்ளன, இதில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 3-வது மற்றும் 11-வது சுற்றுகளில் குகேஷ் வெற்றி பெற்றார், அதேபோல் 1-வது மற்றும் 12-வது சுற்றுகளில் லிரென் வெற்றிபெற்றார். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு, 13-வது சுற்றில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடி, பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.

Dec 12, 2024

மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நிதிக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டது. இந்த நன்கொடை, ஜுக்கர்பெர்க் மற்றும் டிரம்ப் இடையே மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பை தொடர