சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுபடி 1.5 லட்சம் அரசு பணியிடங்களை நீக்கியது பாகிஸ்தான்

September 30, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் கீழ், கடன் சுமையை குறைக்கும் நோக்கில், பாகிஸ்தான் அரசு கடும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 150,000 அரசுப் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன. மேலும், செயல்படாத 6 அமைச்சகங்கள் மூடப்பட்டு, 2 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன. விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் வரிகளை அதிகரித்து, அரசின் செலவினங்களை குறைப்பதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் கீழ், கடன் சுமையை குறைக்கும் நோக்கில், பாகிஸ்தான் அரசு கடும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 150,000 அரசுப் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன. மேலும், செயல்படாத 6 அமைச்சகங்கள் மூடப்பட்டு, 2 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன.

விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் வரிகளை அதிகரித்து, அரசின் செலவினங்களை குறைப்பதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் கூறுகையில், புதிய சீர்திருத்தங்கள் பாகிஸ்தானை IMF-ன் கடன் சுழற்சியிலிருந்து மீட்கும் என்றும், நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu