பாகிஸ்தானின் கைபர் பக்தன்குவா மாகாணத்தில் சீன பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் கைபர் பக்தன்குவா மாகாணத்தில் சீன பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதி ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது சீனர்கள் சென்ற பேருந்து வெடித்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் பேருந்து தீ பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட ஐந்து சீனர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் கைபர் பக்தன் குவாவின் தாசு பகுதியில் நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். இறந்தவர்களின் உடல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.