பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கல பதக்கத்தை வென்றார் மனு பாக்கர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று, சிறந்த திறமை மற்றும் துல்லியத்துடன் விளையாடினார். இதன் மூலம் இந்தியாவின் 12 ஆண்டுகால பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்து, வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அதன்படி துப்பாக்கி சுடுதல் 221.7 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் மேடையில் அவரது வெற்றி இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கு முக்கியமான மைல்கல்லாகும்.