இந்திய ராணுவம் சீன படைகளின் நுழைவுகளை முறியடித்த பின், அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு மே மாதம், சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதிக்கு நுழைய முயன்றது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பிறகு, சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்கின்றன. எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகளை அகற்றுவது தொடர்பான பணிகள் நடைபெறுகின்றன.