கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் மீண்டும் பெரியார், சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை பாஜக அரசு மாற்றியது. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெக்டேவரின் உரைகள், சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டது. இது அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது. அதில் மீண்டும் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்திரிபாய் பூலே அவர்களின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற வரலாற்று பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையில் ஆன திருத்த குழு இந்த திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை.