தென் அமெரிக்க நாடான பெருவில் விரைவில் யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, யுபிஐ தொழில்நுட்பத்தில் அடி எடுத்து வைக்கும் முதல் தென் அமெரிக்க நாடாக பெரு வரலாறு படைக்கிறது.
என் பி சி ஐ சர்வதேச கட்டண நிறுவனம், பெரு நாட்டின் மத்திய வங்கியுடன் கூட்டணியில் இணைந்து, அந்நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தை வழங்க உள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான அடிப்படை தொழில்நுட்ப கட்டமைப்புகளை வழங்குவதற்கு இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி யுபிஐ கட்டமைப்புகளை வழிநடத்துவதில் முக்கிய உதவிகள் புரிந்ததாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.