பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாம்பரம்- கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்,ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அறிவிக்கப்படும் அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ளது. குறிப்பாக கோவை மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் 16, 17 ஆகிய தேதிகளை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. தாம்பரத்திலிருந்து 17,18 ஆம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதேபோன்று பெங்களூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூருவில் பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து 12-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு 12 மணிக்கு சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.