தமிழ்நாட்டில் கனமழைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கனமழைக்கு எதிரான தயார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழை முன் எச்சரிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கான கூட்டத்தில் துணை முதல்வர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் சென்னையில், 15 ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.