பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளில் பரிசாக வந்த பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது.
பிரதமர் மோடியிற்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட உள்ளது. மேலும் இதன் மூலம் பெறப்படும் நிதியின் ஒரு பகுதி ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது. நேற்று, பிரதமர் மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு, 6-வது முறையாக ஏலம் தொடங்கப்பட்டது. இந்த ஏலத்தில் 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஏலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு ஏலத்தில் பங்கேற்க, https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.