வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன் அணி குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 37- 17 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் புனே தரப்பில் ஆல்ரவுண்டர் அஸ்லாம் முஸ்தபா 10, குஜராத் அணியின் சோம்வீர் 6 புள்ளிகளை கைப்பற்றினர். மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 38-35 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதில் ஜெய்ப்பூர் அணியின் ரைடர் அர்ஜுன் 14, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ரைடர் பவன் ஷராவத் 12 புள்ளிகள் பெற்றனர்.