சென்னையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய சொத்துவரிகள் நடைமுறைபடுத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு, 600 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 25%, 601 முதல் 1,200 சதுர அடிக்கு 50%, 1,201 முதல் 1,800 சதுர அடிக்கு 75%, மற்றும் 1,800 சதுர அடிக்கு மேலாக 100% உயர்வு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில், 2025-26-ம் ஆண்டுக்கான 6% உயர்வு செப்டம்பர் 27-ம் தேதி மேயர் பிரியாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த வரி உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.