தமிழகத்தில் நாய்களின் இனப்பெருக்கத்திற்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை 'தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை-2024' என்ற வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில், மரபணு கோளாறுகளைத் தவிர்க்கவும், வணிக வளர்ப்புக்கு உரிமங்களை பெறவும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் ராஜபாளையம், கோம்பை போன்ற நாட்டு நாய்கள் வளர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரெஞ்சு புல்டாக் மற்றும் செட் ஹவுண்ட் போன்ற 11 இனங்களுக்கு வளர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், நாய்களின் உடல்நலத்தை உறுதிப்படுத்த கால்நடை மருத்துவர் மூலம் சோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.