மத்திய கல்வி அமைச்சகம் நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நீட்,ஜேஇஇ பயிற்சி நிலையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் 16 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது. குற்றவழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.