ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி,முருகன் உள்ளிட்ட நான்கு பேரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு நளினி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் இவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை இந்திய இலங்கை துணை தூதரகத்தில் டிசம்பர் மாதத்தில் மனு அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.