மும்பையில் இன்று கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பைக்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் ஏதேனும் அவசர உதவிகளுக்கு 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அருகில் உள்ள விமான நிலையங்களில் இருந்து மும்பை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.