டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடும் குளிர்கால நிலை காரணமாக மழலையர் பள்ளி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.