கேரளாவில் ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயங்கி வருகின்றது. இது கேரளா மாநிலத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் கேரளாவிற்கு ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் சென்னையில் இருந்து மங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான வழித்தடம் இந்த வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளன.