செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமீன் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அதில் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து ஜாமீன் மனு ஜூலை 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது