பங்குச்சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்வு

March 22, 2024

இந்திய பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்றம் இன்று தொடர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 72831.94 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 22096.75 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளது. இவை முந்தைய நாளை விட முறையே 0.26% மற்றும் 0.39% உயர்வாகும். தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, யூ பி எல், அப்பல்லோ ஹாஸ்பிடல், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப், சிப்லா, […]

இந்திய பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்றம் இன்று தொடர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 72831.94 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 22096.75 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளது. இவை முந்தைய நாளை விட முறையே 0.26% மற்றும் 0.39% உயர்வாகும்.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, யூ பி எல், அப்பல்லோ ஹாஸ்பிடல், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப், சிப்லா, டாடா ஸ்டீல், ஐடிசி, பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று இழப்பை சந்தித்துள்ளன. முக்கியமாக, எல் டி ஐ மைண்ட்ட்ரீ, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, டி சி எஸ், டாடா கன்சியூமர், எச்டிஎப்சி வங்கி, என்டிபிசி ஆகியவை சரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu