இந்திய பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 349.05 புள்ளிகள் உயர்ந்து 82134.61 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 99.61 புள்ளிகள் உயர்ந்து 25151.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ், அதானி பவர், டி சி எஸ், ஐ டி சி, டாடா மோட்டார்ஸ், வேர்ல்பூல், வோடபோன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இன்போசிஸ், டாடா ஸ்டீல், எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி போன்றவை சரிவடைந்துள்ளன.