ஸ்லோவாக்கியாவில் வெள்ளம் - நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

September 19, 2024

ஸ்லோவேகியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். செக் குடியரசு எல்லையையொட்டி உள்ள மேற்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், பிராட்டிஸ்லாவா நகரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, டனுபே ஆற்றின் நீர்மட்டம் 970 செ.மீ. ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரியா எல்லையில் உள்ள டெவின் மாவட்டம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் […]

ஸ்லோவேகியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

செக் குடியரசு எல்லையையொட்டி உள்ள மேற்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், பிராட்டிஸ்லாவா நகரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, டனுபே ஆற்றின் நீர்மட்டம் 970 செ.மீ. ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரியா எல்லையில் உள்ள டெவின் மாவட்டம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மொராவா ஆற்றில் வெள்ளத்தால் ஊருக்குள் நீர் பாய்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகளால் 20 மில்லியன் யூரோ மதிப்பில் இழப்பு ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டராபா கூறியுள்ளார். தீயணைப்புத் துறையும் மீட்புக் குழுவும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu