சாப்ட் பேங்க் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மின்சார கார் திட்டத்தை இந்தியாவில் நிறுத்தி வைத்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் போன்றவற்றில் கவனம் செலுத்தும் நோக்கில், மின்சார கார் திட்டம் தாமதப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மின்சார கார் சந்தையில் களமிறங்குவதற்கு முன், மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் அதன் சந்தை பங்களிப்பை விரிவுபடுத்தும் நோக்கில் திட்டங்கள் தீட்டி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.