நூல் விலை உயர்வு, மின் கட்டணம் குறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 25ஆம் தேதி வரை 20 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 1500 க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். நூலின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும்,மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி 20 நாள் வேலை நிறுத்தத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் 100 கோடிக்கும் அதிகமான அளவு வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், 3 லட்ச தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தின் காரணமாக காடா துணி தேக்கம் அடைந்து நஸ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.