அந்தமானில் இன்று அதிகாலை 4:31 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் கடலில் ருத் லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4:31 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 54 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. இதனால் அருகே சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகளில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதேபோன்று நேற்று நள்ளிரவில் உத்தரகாண்டின் தலைநகர் டேராடூனில் 2.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.