தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இது 100 நாள் வேலை திட்டமாக தமிழகத்தில் செயல்படுகிறது. நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர், தமிழ்நாட்டில் 89,03,310 பயனாளிகள் உள்ளனர். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திட்டத்தில், கேரளா 89.27%, புதுச்சேரி 87.39%, தமிழ்நாடு 86.66% பங்கேற்புடன் சிறந்த மாநிலங்களில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் 32.16% பங்கேற்புடன் மிகவும் குறைவாக உள்ளது.