ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான செயலியை உருவாக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்வதற்காக ஒரு செயலியை உருவாக்க Moving Tech Innovation Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.இதன் மூலம் முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகர பேருந்துகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது