டிசிஎஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, நிறுவனத்தின் நிகர வருவாயில் 8.2% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 11735 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 4% உயர்ந்து, 60583 கோடியாக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, நிபுணர்களின் கணிப்பை விட அதிகமாகவே வருவாய் மற்றும் லாபம் பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன், நிறுவனத்தின் வர்த்தக மாடல் வெற்றியை தந்துள்ளதாக கூறினார்.