சீனாவில் தனது 16.8 லட்சம் மின்சார வாகனங்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. டிரங்க் தாழ்ப்பாள் தொடர்பான தொழில்நுட்ப குளறுபடியை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து வாகனங்களையும் இலவசமாக சரி செய்வதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
சீனாவை பொறுத்தவரை, இந்த திரும்பப் பெறுதல் நடவடிக்கை, இறக்குமதி செய்யப்பட்ட மாடல் S மற்றும் மாடல் X வாகனங்கள், மற்றும் 2020 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் Y கார்களை உள்ளடக்கியது.