தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில் ரக்ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ், தைவான் வீராங்கனையான டங் ஐ எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரக்ஷிதா, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.