25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை கண்டித்தும் மீனவர்களின் படகுகளை மீட்க கோரியும் பாம்பன் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாம்பன், தெற்கு வாடி, சின்னப்பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்