கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18ம் தேதி மெத்தனால் கலந்த விசச்சாராயம் குடித்து 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலை, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 55 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது