டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி குரூப் 2 முதன்மை தேர்வு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையம் ஒரு நாள் முன்னதாக இதன் தேர்வு முடிவுகள் சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 5486 காலி இடங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை 55 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். தற்போது இதன் காலி பணியிடம் 6157 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது