பாகிஸ்தானில் 2 பழங்குடியினருக்கு இடையே மோதல்.
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் 2 பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 42 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மாமுசாய் மற்றும் பரா சம்கானி பழங்குடியினருக்கு இடையே நிலத் தகராறு தொடர்பாக ஜூலை 24 அன்று மோதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் ஒரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திடீரென்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.