பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது போர் தொடுப்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் காசாவில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. துருக்கி லிபியாவுக்கு படைகளை அனுப்பியது போல இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் என்று கூறினார். துருக்கியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர். ஆரம்பம் முதலே இஸ்ரேல் போரை கண்டித்து வருகின்றனர். மக்களுக்கு ஆயிரக்கணக்கான டன் உதவி பொருட்களை துருக்கி வழங்கியது. இஸ்ரேல் காசாவில் போர் குற்றத்தில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தென் ஆப்ரிக்காவுடன் இணைந்துள்ளது. இஸ்ரேலுடன் இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே தூதரக பதற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் மீது போர் தொடுப்போம் என்று கூறியுள்ளார்.