இந்திய நிறுவனங்களின் மசாலா பொருட்களில் புற்றுநோய் காரணிகள் அதிகமாக உள்ளதாக சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் இந்திய மசாலா பொருட்களை தடை செய்தன. அண்மையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இந்திய மசாலா பொருட்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது, பிரிட்டனில் இந்திய மசாலா பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த மசாலா பொருட்கள் நிறுவனங்களான எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் எத்திலின் ஆக்சைடு இருப்பதாக சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் உணவு பாதுகாப்பு துறை இது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.