லெபனானில் வசிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான், ஸ்வீடன் நாட்டு மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டு தூதரகங்கள் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் மேலும் மத்திய கிழக்கில் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எந்த ஒரு விமானம் கிடைத்தாலும் அதில் பயணம் செய்து லெபனானை விட்டு வெளியேறுமாறு பெயிரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.