புற்றுநோயை குணப்படுத்தும் ஊசி கண்டுபிடித்து இங்கிலாந்து சாதனை

September 1, 2023

இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு, புற்றுநோயை குணப்படுத்தும் உலகின் முதல் ஊசி மருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. அடிசோலிசுமாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஊசி மருந்து, நரம்பு வழியாக செலுத்தப்படும் வகையைச் சேர்ந்ததாகும். மேலும், செலுத்தப்பட்ட 7 நிமிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களைத் தேடி அழிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த ஊசி மருந்துக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அங்கீகாரத்துக்காக, எம்எச்ஆர்ஏ வுக்கு விண்ணப்பித்துள்ளதாக […]

இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு, புற்றுநோயை குணப்படுத்தும் உலகின் முதல் ஊசி மருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

அடிசோலிசுமாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஊசி மருந்து, நரம்பு வழியாக செலுத்தப்படும் வகையைச் சேர்ந்ததாகும். மேலும், செலுத்தப்பட்ட 7 நிமிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களைத் தேடி அழிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த ஊசி மருந்துக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அங்கீகாரத்துக்காக, எம்எச்ஆர்ஏ வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊசி மருந்துக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன், புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம், நோயாளிகளுக்கான சிகிச்சை நேரம் மூன்றில் ஒரு பங்காக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு, இந்த மருந்துடன் சேர்த்து ரத்த மாற்று சிகிச்சையும் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu