உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது பத்து அம்ச திட்டத்துக்கு அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஆதரவு தரவேண்டும் என்று அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டத்தில் அவர் கூறியதாவது, “உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான எனது திட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போரில் ஈடுபட்ட நாடுகளும் அதில் உள்ளன.
ஆனால், சில நாடுகள் அந்த திட்டத்திற்குப் பாதிப்புக்குரிய திட்டங்களை முன்மொழிகின்றன. அவை நிதானத்துக்குப் புறம்பாகவே இருக்கின்றன. போரைத் தொடர்ந்து விரும்புகின்றன. எனவே, உண்மையான அமைதி ஏற்படுத்தும் திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.