காசா போர் அதிருப்தி - இஸ்ரேல் அமைச்சர் ராஜினாமா

June 11, 2024

இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருக்கும் பென்னி கான்ட்ஸ் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். காசாவில் நான்கு பிணை கைதிகளை மீட்க 274 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாவுக்கும் இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருக்கும் பென்னி கான்ட்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பென்னி கான்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருக்கும் பென்னி கான்ட்ஸ் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

காசாவில் நான்கு பிணை கைதிகளை மீட்க 274 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாவுக்கும் இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருக்கும் பென்னி கான்ட்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பென்னி கான்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் நேதன்யாகு தடுத்து வருகிறார். எனவே நான் இன்று எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மிகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். முன்னதாக பென்னி பதவி விலகுவதற்கு முன்பு அவரை பிரதமர் நேதன்யாகு தடுத்துள்ளார். பதவியை விட்டு விலக வேண்டாம் போரை கைவிடுவதற்கான நேரம் இது கிடையாது. படைகள் ஒன்று கூடி போரிடும் நேரம் இது என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் பதவி விலகியது மேதன்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் இதனால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu