கடந்த வாரம் ஹெய்ல் 1 என்று அழைக்கப்படும் ஏவுகணையை கடலுக்கு அடியில் வடகொரியா சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் இடம் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்ததாக, ஹெய்ல் 2 என்ற ஏவுகணையை கடலுக்கு அடியில் வடகொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள் செயற்கையான சுனாமி அலைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 4 முதல் 7 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவுகளில் ஏவுகணையின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.